Pages

Tuesday, March 1, 2016

உசன் கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

உசன் கந்தசுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுவரும் நூதன இராஜகோபுர அமைப்பு வேலைகளும் , ஆலய புனருத்தாரண வேலைகளும் நிறைவடயும் நிலையில் எதிர்வரும் பங்குனி மாதம் 14 ம் திகதி கிரிகை ஆரம்பமாகி  நடைபெற திருவருள் கூடியுள்ளது, 17 ம் திகதி  எண்ணை காப்பும் 18ம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று ,தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும், இந்த காலத்தில் உசன் முருகபெருமான் அடியார்கள் அனைவரும் வழிபாடுகளில் கலந்து எம்பெருமான் அருள் பெறுமாறு வேண்டுகிறோம் , ஆலய திருப்பணிக்கும் சிறப்பு மிக்க இராஜகோபுர திருப்பணிக்கும் வாரிவழங்கிய அனைத்துலகமக்களுக்கும் ,
சகலவழிகளிலும் உறுதுணையாய் நின்ற உசன் அடியார்களுக்கும் மனமார்ந்த நன்றியும் , எம் பெருமான் அருளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் .

நன்றி 
தர்மகர்த்தா