Pages

Thursday, January 26, 2017

உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 31/01/2017 செவாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.  பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இம்முறை இந்த இந்த நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தினூடாக ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

வித்தியாலய முதல்வர் த. சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தென்மராட்சிக் கல்வி வலைய திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிவஞானம் மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினாராகக் கலந்து சிறப்பிக்க உள்ளார்.   உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு, மக்கள் வங்கி ஓய்வுநிலை முகாமையாளர் கந்தையா பாலச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், முன்னைநாள் ஆசிரியர் திருமதி புஸ்பராணி நவரத்தினம் அவர்கள் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அனைவரையம் அன்புடன் அழைக்கிறது.

இந்த மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை,  இந்த நிகழ்வை முன்னின்று நடாத்தும் பழைய மாணவர் சங்கத்துக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.