அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 7, 2026

துயர் பகிர்வு - சிதம்பரப்பிள்ளை ஈசுரபாதம்

நாகர்கோவிலில் பிறந்தவரும் உசனில் வாழ்ந்தவரும் இறுதிக் காலத்தில் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான சிதம்பரப்பிள்ளை ஈசுரபாதம் அவர்கள் அவுஸ்ரேலியாவில் இறைவனடிசேர்ந்தார் என்ற தகவலறிந்து வேதனைப்படுகிறோம்.

அன்னார் புவனேஸ்வரி (தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பகிரதன், பார்த்தீபன், பிரகலதா, புருசோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

மாணிக்கம் பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

அமரர் புஸ்பராசா, புஷ்பராணி, தயானந்தசோதி, அமரர் இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியும் - கனடா பிரார்த்திக்கிறது. அதேவேளை அன்னாரின் பிரிவால் வேதனையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.