அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, November 28, 2012

திரு.தம்பையா வைத்திலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்



உசனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபாலக ஊழியர் திரு தம்பையா வைத்திலிங்கம் அவர்கள் உசனில் காலமானார். நீண்ட காலம் எமது ஊரில் இருந்து சேவையாற்றிய திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களின் மறைவினால் துயருறும் 
குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு ,
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக உசன் முருகனை வேண்டுகிறோம் .

தொடர்புகளுக்கு: சிவானந்தன் உசன் (மருமகன்) -94776544482


Saturday, November 10, 2012

உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்



1924 ம் ஆண்டின் முன்புள்ள காலப்பகுதியில் உசனைச் சேர்ந்த சைவ மக்கள் கற்றுவந்த ஒரேயொரு பாடசாலை மிருசுவில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையே அதனால் மக்களின் செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்களான வைப் பெரியார் உசன் திரு. வி. வைத்திலிங்கம் திரு. பெ. இராமநாதன் மற்றும் பெரியார்களும் ஒன்று சேர்ந்து உசனில் ஒரு சைவ பாடசாலையை நிறுவ வேண்டும் என்று தீர்மானித்து உசன் கந்தசாமி கோவில் தர்மகத்தா திரு. வி. வைத்திலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மடத்தில் கல்வி கற்க ஒழுங்கு செய்தனர்.