அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, October 14, 2023

துயர் பகிர்வு - திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா

உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கௌரீஸ்வரி புஷ்பராஜா அவர்கள் வெள்ளிக்கிழமை, October 13, 2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வீரகட்டிய மாணிக்கம் & Sons முன்னாள் உரிமையாளர் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பேர்த்தியும்.

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் - தெய்வானைப்பிள்ளை (வசந்தா) அவர்களின் அன்பு மகளும்,

புஷ்பராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிருஷன், மேனன், தனுஷா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, October 14, 2023 அன்று Lanka மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பூதவுடல் ஞாயிற்றுக் கிழமை October 15, 2023 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் - குடுமபத்தினர்

தொடர்புகளுக்கு
மேனன் - +94 76 748 5207
நிருஷன் - +94 77 748 5207

அமரர் கௌரீஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் மறைவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.