அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, May 5, 2026

துயர் பகிர்வு
சிதம்பரப்பிள்ளை திலகநாதன்

தோற்றம்: Jauary 28,1943 மறைவு: May 3, 2026

தென்மராட்சி, உசனைப் பிறப்பிடமாகவும், 23 - 32nd. Lane, வெள்ளவத்தை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் (Retired Deputy General Manager, Finace & Planning, Bank of Ceylon (BA, MBA, FSMS) அவர்கள் இறைபதமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் அமர்களாள முருகேசு சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அமர்களான சந்திரசேகரம் - நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருமதி மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தில்லைநடேசு (Swisterland) அவர்களின் சகோதரரும்,

திலாணி (UK), திலீபன்(Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Dr. சபேசன் (UK), தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷான், பிரம்மன், நீரஜா, தில்ஷயன், துவாரகேஸ் ஆகியோரின் பேரனாரும்,

சிவசாந்தி, அமர்ககளான கமலாசனி, தியாகராஜா, Dr. ராஜலக்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரது பூதவுடல் 23 - 32nd. Lane, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் May 6, 2026, புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, May 10, 2026, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணியவில் நிசலசெவன, கல்கிஸ்சை பொது மையானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கண்ணிருடன் வேண்டுகிறோம்.

ஓம் சாந்தி , சாந்தி, சாந்தி.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: +94777822456

அமரர் சிதம்பரப்பப்பிள்ளை திலகநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, May 3, 2026

துயர் பகிர்வு - சிவபாக்கியம் சுந்தரேசன்

உசனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தில் வாழ்ந்துவந்தவருமான சிவபாக்கியம் (பாக்கியம்) சுந்தரேசன் அவர்கள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் அமரர்களான சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகளும்,

சுந்தரேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷ்ணா (UK), தனுஷா (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர் சிவமலர், சிவராசா (சாவகச்சேரி), சிவலோகநாயகி (ஸ்கந்தபுரம்), அமரர் பாய்கியலக்குமி, விக்னேஸ்வரன் (மீசாலை), ஜெகதீஸ்வரன் (இத்தாலி), சிவராணி (இத்தாலி) ஆகியோரின் சகோதரியுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அமரர் சிவபாக்கியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Saturday, May 2, 2026

துயர் பகிர்வு - கண்மணி முத்துக்குமார்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கண்மணி முத்துக்குமார் அவர்கள் May 2, 2026, சனிக்கிழமை மாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர் முத்துக்குமாருவின் அன்பு மனைவியும்,,

மகாலக்குமி, அமரர் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதியாபரணம் (குணம்) அவர்களின் அன்பு மாமியும்,

அமரர்களான ஐயாத்துரை, பூரணம், இராசம்மா ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அமரர் கண்மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



துயர் பகிர்வு - விசுவலிங்கம் இராமலிங்கம்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் இராமலிங்கம் அவர்கள் May 2, 2026, சனிக்கிழமை காலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான விசுவலிங்கம் கண்ணாத்தா ஆகியோரின் பாசமிகு மகனும்,

அமரர்கள் முருகேசு சின்னம்மா ஆகியோரின் மருமகனும்,

அமரர் செல்லாச்சியின் அன்புக் கணவரும்,

அமரர் முருகானந்தன், முருகதாஸ் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யதுர்சன் (மாணவன், பேராதனை பல்கலைக்கழகம்), தனுசிகன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணியளவில் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தகவல்
மகன் மற்றும் பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளிற்கு
மகன் +94740554984
பேரன் +94742913681

அமரர் இராமலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Wednesday, April 29, 2026

துயர் பகிர்வு - சிவப்பிரகாசம் மகேந்திரன்

காலம்சென்றவர்களான சிவப்பிரகாசம் - நாகமுத்து தம்பதிகளின் அன்புமகனும்,

குமாரசாமி, சரஸ்வதி, புவனேஸ்வரி, ஸ்ரீனிவாசன், இராஜமோகன், அமரர் சிவராசா,பாக்கியலக்சுமி, அமரர் ஜெயலக்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதனுமான சிவப்பிரகாசம் மகேந்திரன் அவர்கள் இறைவனடி எய்திய தகவல் எமை எல்லாம் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Melbourne, Australia ல் வசித்துவந்தவாரான இவர் அண்மைக்காலமாக நொடிவாய்ப்பட்டிருந்தார்.

இவர் உசன் மக்களோடு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனை வேண்டுகிறது. அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Monday, April 27, 2026

பொதுக்கூட்டமும் கோடைகால ஒன்றுகூடலும்

அன்பார்ந்த கனடா வாழ் உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் பொதுக்கூட்டமும் கோடைகால ஒன்றுகூடலும் September 19, 2026, சனிக்கிழமை அன்று 1555 Neilson Road, Scarborough, M1B 5Z7, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park ல் நடைபெறவுள்ளது என்பதை ஆர்வமுள்ளவர்களுக்கு அறியத் தருகிறோம்! இந்த வருடாந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும்.

பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் இடம்பெறும்.

அனேகமானோர் இதுவரை ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இல்லாமல் இருக்கிறீர்கள். அங்கத்தவர் அல்லாதோர் விரைவாக அங்கத்தவராகுமாறு வேண்டுகிறோம். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அங்கத்துவக் காலம் July 1 ஆம் திகதியிலிருந்து June 30 ஆம் திகதிவரை என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆலோசனைகளை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் அல்லது தற்போதைய நிவாகசபை உறுப்பினர் ஒருவரிடம் தெரிவிக்கலாம்.

ஊரோடும், உறவுகளோடும், நண்பர்களோடும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருக்க வாருங்கள். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்றுகூடலில் சங்கமிப்போம்.



Friday, January 9, 2026

துயர் பகிர்வு - பொன்னையா ஜெயவிந்தன் (விந்தன்)

உசனைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும்கொண்ட பொன்னையா ஜெயவிந்தன் (விந்தன்) வியாழக்கிழமை, January 8, 2026 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற பொன்னையா நாகேசுவரி தம்பதிகளின் மகனும்,

காலம் சென்ற இணுவில் மேற்கு செட்டிவளவு இராமநாதன் கண்மனிஅம்மா தம்பதிகளின் மருமகனும்,

நிர்மலாவின் (மாலா) கணவரும்,

நியானி மற்றும் சனோயனின் அப்பாவும்,

மகிந்தன், கீதா மற்றும் காலம் சென்ற நிசந்தன், காந்தி ஆகியோரின் சகோதரரும் ஆவர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் விபரம்

VISITATION:
Sunday, January 11, 2026 From 5:00 pm to 9:00 pm
Monday, January 12, 2026 From 12:00 pm to 2:00 pm

FUNERAL SERVICE:
Monday, January 12, 2026
From 2:00 pm to 4:00 pm

At:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, L3R 5G1, ON, Canada

CREMATION & WITNESSING:
Monday, January 12, 2026
From 4:30 pm to 5:00 pm
At
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, L0H 1G0, ON, Canada

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.