அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, July 29, 2016

திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் (இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர்- சாவகச்சேரி)

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கொடிகாமம்), அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(ஆசிரியர்- மீசாலை), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மிகு மனைவியும்,

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன் (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்), வேலும்மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சிவகுருநாதன், வல்லிபுரநாதன், நரேந்திரன், நல்லைநாதன், அண்ணாமலை, செல்வராணி, சற்குணம், விமலா, அருள்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, கலாநிதி, நந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமானந்தம், குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் பாசமுள்ள மைத்துனியும்,

பிரகாஸ், தர்சினி, செமிலா, பிரமிளா, சர்மிளா, றசிகலா, ஸ்ரீகரன், செந்தூரன், சிந்துயா, நர்மதன், மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிரிசாந், அனோச் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஸ்மன், அஜிஸ்மன், ஹரிஸ், சிறிராம், சரவணன், சாதனா, தூரிகன், கவிநிலா, ஆரன், நிரான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, 30/07/2016 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்ற முகவரியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, 31/07/2016 முற்பகல் 10 மணி முதல் மதியம் 12 மணி வரை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்ற முகவரியில் இடம்பெற்று அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சோமசுந்தரம்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +19056968645

ஸ்ரீகாந்தன் — கனடா
தொலைபேசி: +16474498124

ஸ்ரீகாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777491639

ஸ்ரீகதிர்காமநாதன் — கனடா
தொலைபேசி: +16473412030


Monday, July 18, 2016

உசனில் ஜூலை மாத "முழுநிலா கருத்தரங்கு"

உசன் கிராம அபிவிருத்தி சங்கம் மாதாந்தம் நடாத்தும் முழுநிலா கருத்தரங்கின் ஜூலை மாத கருத்தரங்கு எதிர்வரும் 19 ம் திகதி நடைபெறவுள்ளது .
இலங்கை மக்கள் ஆகிய நாங்கள் பல்வேறு வகையான சட்ட்ங்களால் ஆளப்பட்டு வருகின்றோம். அவற்றுள் தேசவழமை சடடமும் முக்கியமானதாகும் தேசவழமை என்பது யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கு ஏற்புடைய ஒரு வழமைச் சடடமாகும் டச்சு காரர் இலங்கையை ஆண்டுகொண்டு இருந்தபோது 1704 ம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வழக்காறுகள் பற்றி விசாரணை செய்து அவற்றை தொகுக்கும்படி டச்சுகவர்னர் சைமன் அவர்கள் யாழ்ப்பாண பட்டினத்தில் திசாவையாக இருந்த கிளாஸ் ஐசக்ஸ் என்பவரை பணித்திருந்தார் அவரால் தொகுக்கப்படட இந்த ஆவணம் 1708 ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட அதை 12 யாழ்ப்பாண முதலியார்மார் ஒப்புக்கொள்ள கவர்னரால் சடடமாக்கப்பட்ட்து. 1814 ம் ஆண்டில் பிரதம நீதியரசராக சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் அவர்கள் தேசவளமையை ஆங்கில த்திட்கு மொழி பெயர்த்தார் அக்காலத்திலிருந்து தேசவழமை சடடம் சடடநூலில் இருந்து வருகின்றது. 
இன்றைய காலகடடத்தில் பல பிணக்குகளை இணக்க வழி நகர்த்த நாமும் சிலவற்றையாவது அறிவோம் நாளை ...........
விசேடமாக தங்களது பெறுமதி மிக்க கேள்விகளுக்கு தெளிவான பதில்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் அனைவரும் தவறாது அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய அன்போடு அழைக்கின்றோம்.
19.07.2016 உசன் இராமநாதன் மகா வித்தியாலய பிரதான மண்டபம்# மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள கருத்தரங்கில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு வேண்டுகிறோம் . நிகழ்வை தொடர்ந்து முன்னெடுக்கும் கிராமங் அபிவிருத்தி சங்கம் மற்றும் உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு கனடா உசன் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ..