அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 30, 2019

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்


உசன் கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தனது இள வயதிலிருந்தே உசன் கிராம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் சீத்த ஆயுள்வேத வைத்தியர் ஐயாத்துரை ஜெபநாமகனேசன் அவர்கள். இவரின் வைத்திய சேவையால் உசன் கிராமமும், அயற்கிராமமும், ஏன் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மேலும் பல கிராமங்களும், நகரங்களும் பயன்பெற்று வருகின்றன.  புலம் பெயர் தமிழர்களும் இவரின் சேவையைப் பெற்று பலனடைத்துள்ளனர்.

இவரின் தயாரிப்பில்  முற்றிலும் தரமான மூலிகைகள் கொண்டு, இரசாயணக் கலப்படமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் இலங்கையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பாவனையில் உள்ளது.

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் நெல்லி, அவிரி, கையாந்தாரை, கறிவேப்பிலை, வல்லாரை, மருதாணி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. தலை வலி போக்கவல்லது. முடி உதிர்தல், பொடுகு நீங்க, கூந்தல் கருமையாகும். தும்மல் நின்றுபோகும். கண்குளிர்ச்சி, ஞாபக சக்தி அதிகமாகும். நரை முடி நீங்கி ஆரோக்கியமான முடி வளரும். 

அதிகளவு கனேடிய தமிழ் மக்களும் பாவித்து பலன் கிடைத்தது.

இப்பொழுது கனடாவில் கிடைக்கிறது குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்.
நீங்களும் குமாரிக்கா சந்தனாதி எண்ணெயை வாங்கிப் பாவித்துப் பயன் பெறலாம்.

தொடர்புகளுக்கு
416-434-4440

www.tamilkadai.ca எனும் Online தளத்திலும் order செய்யலாம்.





Thursday, August 29, 2019

அஞ்சலி

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் கணித ஆசிரியர் ஆறுமுகம் சோதிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற தகவலை ஆழ்ந்த துயரத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். 1976 - 1982 காலப் பகுதியில் இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விப் பணி புரிந்தார்.

இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் தனது கல்விச் சேவையை வழங்கியிருந்தார்.

அன்னாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.