அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, October 31, 2016

பரத நாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர் ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி செல்வி ஹரிணி சிவசுப்பிரமணியம் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மக்களையும், அயற்கிராம மக்களையும் அன்போடு அழைக்கிறார்.

திகதி: சனிக்கிழமை, November 5, 2016
இடம்: Armenian Youth Center,
50 Hallcrown Place, Toronto, ON M2J 1P6

நேரம்: மாலை 5 மணி (5 மணி முதல் 5:45 வரை வரவேற்பு. சரியாக 5:45 மணிக்கு ஆசனங்களில் அமருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்)

செல்வி ஹரிணியின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் கலைத் துறையில் மேலும் சிறந்து விளங்கவும், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் கலைப் பணி தொடரவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, October 13, 2016

திரு பெரியதம்பி சிவபாதசுந்தரம்
(சிவம்- பொலிஸ்)

யாழ். மிருசுவில், உசனைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவபாதசுந்தரம் அவர்கள் 12-10-12016 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிமேகலா(மதி- கனடா), சிவரூபி(சுவிஸ்), முரளீதரன்(ஜெர்மனி), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன்(கனடா), செயந்தன்(சுவிஸ்), தபோதினி(ஜெர்மனி), பிரதீபன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜேய், ஆதித், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை 17/10/2016 அன்று 10:00 மு.ப முதல் 01:00 பி.ப வரை Haus Des Abschieds Unterer Dorrenberg 11, 42105 Wuppertal, Germany என்ற முகவரியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும்.

இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை 18/10/2016 அன்று 11:00 மு.ப முதல் 02:00 பி.ப வரை Am Unterbarmer Friedhof 16, 42285 Wuppertal, Germany என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
முரளீதரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492024938117
செல்லிடப்பேசி:+4917656389905

நன்றி: www.kallarai.com


Wednesday, October 12, 2016

திரு.பெரியதம்பி சிவபாதசுந்தரம் (பொலிஸ் சிவம் )அவர்கள் காலமானார்....

உசனை சேர்ந்த திரு.பெரியதம்பி சிவபாதசுந்தரம் (பொலிஸ் சிவம் )அவர்கள்
ஜெர்மனியில் காலமானார் . இவ் அறிவித்தலை அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .அன்னாரின் ஆத்ம சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறது
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மகள்
மதி (கனடா ) 416-292-2466




Wednesday, October 5, 2016

செல்வன் சிவகுமார் மயூரிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இம்முறை நடைபெற்ற புலமைபரீட்சை பரீட்சையில் 165 புள்ளிகள் பெற்று எமது பாடசாலை மாணவன் செல்வன் சிவகுமார் மயூரிகன் சித்தியடைந்துள்ளார். மேலும் பரீட்சைக்கு தோற்றிய 23 மாணவர்களில் 20 மாணவர்கள் சாதாரணசித்தியடைந்துள்ளனர். மயூரிகனுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ,