அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, June 30, 2017

அன்போடு அழைக்கிறோம் / Invitation


நாளை சனிக்கிழமை, July மாதம் 1 ஆம் திகதி Scarborough நகரில் அமைந்திருக்கும் Neilson Park இல் நடைபெற உள்ள உசன் மக்களின் ஒன்றுகூடலுக்கு அனைவரையும் மீண்டும் அன்போடு அழைக்கிறோம். நீங்கள் தனியே வந்துவிடாமல் உங்கள் உறவுகளையும் அழைத்து வாருங்கள். பல்சுவை உணவு வகைகளை உண்டு மகிழ்வதோடு விளையாட்டுப் போட்டியிலும் கலந்து சிறப்பிக்க தவறாது வாருங்கள். ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூடத்திலும் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை வழங்கி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
நாளைய தினம் மழைக்கான அறிகுறி தென்படுவதால் Tent வைத்திருப்பவர்கள் அதனை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை கனடாவின் 150 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதத்தில் சிவப்பு மேலங்கி அணிந்து வந்தால் சிறப்பாக இருக்கும்.
நாளை அனைவரையும் சந்திப்போம்.
சுப்பிரமணியம் பாஸ்கரன்
தலைவர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

We invite you all to the Summer Get Together tomorrow, Saturday, July 1. The venue is Neilson Park in Scarborough. Please bring your family and relatives with you. Come and enjoy different varieties of food and participate in the Sports meet. We also remind you that the General Meeting of the association will be held. Please exchange your opinions in the meeting and continue to take the Association in the right direction.
​There is a chance of intermittent rain tomorrow. Those who own a tent, please bring them with you. We will celebrate Canada's 150th. birthday by wearing red colour shirt/blouse.
We can't wait to see you all tomorrow. ​
Baskaran Subramaniam
President


Friday, June 23, 2017

அருட்தந்தை கிறிஸ்ரி செல்வராஜா


யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  கிறிஸ்ரி செல்வராஜா அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெயராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

அன்ரனி சற்குணராஜா, இம்மானுவேல் ஆனந்தராஜா, மேரி ஜெயராணி, ஜேம்ஸ் ஜெயசீலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2017 சனிக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக 131 Birchmount Road Scarborough, கனடா என்ற முகவரியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய மாதா ஆலய பங்கில் 24-06-2017 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில்  இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இத்திருப்பலியில் பங்குகொண்டு அன்னாரின் இளைப்பாற்றிக்காக மன்றாட அனைவரையும் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு
அன்ரனி சற்குணராஜா: இலங்கை - செல்லிடப்பேசி: +94764276788
ஜேம்ஸ் ஜெயசீலராஜா: நோர்வே - செல்லிடப்பேசி: +4767543492

(நன்றி: www.kallarai.com)


Tuesday, June 13, 2017

துயர் பகிர்வு


மிருசுவிலை வதிவிடமாகக் கொண்டு கனடாவில் வசித்துவந்த ஓய்வு நிலை கிராமசேவகர் திரு. ஜோசப் ராஜா அவர்கள் ஞாயிற்றுக் கிழமை, June 11, 2017 அன்று காலமானார்.  இவர் உசன் கிராம சேவகராகவும் சில காலம் கடமை புரிந்துள்ளார்.  இவர் அகிலசாந்தி, வசந்தி, கருணா ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை, June 16, 2017 அன்று மாலை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.  மறுநாள் சனிக்கிழமை, June 17, 2017 அன்று காலை பூதவுடல் மீண்டும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடையப் பிரார்த்திப்பதோடு, பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, June 7, 2017

திரு பொன்னையா பத்மநாதன்
(ஒய்வுபெற்ற நில அளைவையாளர்)



யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, காசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி, சுகீதா(சுவீடன்), பத்மவேணி, பத்மராஜினி(ஐக்கிய அமெரிக்கா) பத்மலோஜினி(கனடா), பத்மரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராமநாதன், பூபதி, பழனிநாதன், யோகநாதன், சந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், சுதாகரன், ஜெகசீலன்(உரிமையாளர்- ஜெகன் பாமசி, Green Grass Hotel), உருத்திரன்(பாபு), குகச்சந்திரகுமார், ஈஸ்வரன்(Auto Supplier) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன், நிஷாந்தி, லர்சனன், சுகர்ணன், சிந்தியா, பிரவீன், ஆகாஷ், அபிஷா, அக்சயா, அஞ்சனா, கவீனா, காவியா, கனித்திரா, உபனயா, கரிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனுக்‌ஷிகன், தனுக்‌ஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல. 228/10,
இராமநாதன் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
சுகந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779004214
சுகீதா(மகள்) — சுவீடன்
தொலைபேசி: +4692088836
பத்மவேணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778693488
பத்மராஜினி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16147951970
பத்மலோஜினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19059975666
பத்மரமணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778617756

(இந்தத் தகவல் www.kallarai.com இல் இருந்து பிரதி செய்யப்பட்டது.)


Sunday, June 4, 2017

வாழ்த்துகிறோம்!


உசன் சனசமூக நிலையக் காப்பாளரும், உசன் கிராம முனேற்றச் சங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைப்பவருமாகிய வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்களும், இந்தச் சமூக சேவைக்குப் பக்கபலமாக நிற்கும் அவரின் மனைவி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை  நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் (Master of Science in Management & Administration of Ayurveda Institutions) பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் மக்கள் சார்பில் இருவருக்கும்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





கடந்த மூன்று வருட காலக் கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் அவர்களால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது.  வட பகுதியில் இந்த உயர் கல்வியைத் தொடர வசதி இல்லாத நிலையில் களனி பல்கலைக் கழகத்தில் அவர்கள் இருவரும் இந்த உயர் கல்வியைக் கற்று வந்தனர்.  குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு, அதே நேரத்தில் தம்மை நாடி வரும் நோயாளர்களையம் கவனித்துக்கொண்டு இந்த மைல்கல்லை அவர்கள் அடைந்துள்ளமை ஏனையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.  இந்த மூன்று வருட காலமும் தேவையானபோது தனது பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து நல்வழிப்படுத்தியதோடு, தனது வைத்தியசாலைத் தேவைகளையும் கவனித்துக்கொண்ட தனது தாயாருக்கும் தான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்கள் தெரிவித்தார்.