அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, November 19, 2014

மரண அறிவித்தல்
திருமதி ஜெயலக்ஷ்மி குழந்தைவேலு

உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை அவர்களின் மகள் ஜெயலக்ஷ்மி அவர்கள் புதன் கிழமை, November 19, 2014 அன்று மட்டுவில் இலங்கையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு (Ayurvedic Physician) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாமோதரம்பிள்ளை, நவரத்தினம், அழகரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

வியஜலஷ்மி (Land Officer, Government Secretariat, Jaffna; Former CO, மிருசுவில் Farm), கமலாம்பிகை (Former Agriculture Instructor), பத்மநாதன் (Former Agriculture Assistant, Sugar Factory, Amparai), பத்மாவதி (Administrative Officer, Government Secretariat, Jaffna), கமலநாதன் (Ayurvedic Physician) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதேவா (Business Owner), மாலினி (Medical Recording Officer) ஆகியோரின் மதிப்புக்குரிய மாமியும்,

ரவீந்திரகுமார், கஜனி, பத்மகுமார், சாகித்யன், குருஷோத்மன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை, November 20, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் நடைபெற்று பூதவுடல் காளி கோவிலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சாந்தினி சிவானந்தன் (மருமகள், கனடா) - +1-905-554-2014


Saturday, November 15, 2014

மரண அறிவித்தல்
திரு. தியாகராஜா வெற்றிவேலு

(இளைப்பாறிய கணித ஆசிரியர்- வத்தேகம, விடத்தற்பளை)
தோற்றம் : 4 June 1932 — மறைவு : 11 November 2014
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொடிகாமத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வெற்றிவேலு அவர்கள் 11-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் உருக்குமணி தம்பதிகளின் அன்பு மூத்த மருகனும்,

தயாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

லோஜனி(கனடா), சுதாகரன் (கனடா), சுபாஜனி (கனடா), எழிலினி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி, சண்முகநாதன், மற்றும் பரமேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநந்தன் (JBN Auto Sale-கனடா), ராஜலட்சுமி (கனடா), பாலசிங்கம் (லண்டன்), சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, செல்லம்மா, சோமசுந்தரம், அரியரத்தினம், மற்றும் புனிதநாயகி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜஸ்மினா, பிரவீனா, நிவேதனா, திவிஷா, கேஷிகா, மிரேஸ், ஹரீஸ், செலீனா, அபிநாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
இலங்கை - +94215685496
சுபாஜனி — கனடா - +14168504169
லோஜனி — கனடா - +16475479435


Tuesday, November 11, 2014

மரண அறிவித்தல் - தியாகராசா வெற்றிவேலு

உசனைச் சேர்ந்த திரு. தியாகராசா வெற்றிவேலு (முன்னை நாள் ஆசிரியர்) அவர்கள் 11-11-2014 அன்று உசனில் இறைபதம் எய்தினார்.

அன்னார் தயாவதியின் அன்புக் கணவரும்,

லோஜனி, சுதாகரன், சுபாஜனி, எழிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்:
லோஜனி +1-416-830-0473
சுபாஜனி +1-416-850-4169


Thursday, November 6, 2014

மரண அறிவித்தல் - திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பு

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பு அவர்கள் 06-11-2014 அன்று வியாழக் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

செங்கமலத்தின் சகோதரியும்,

குணமணி மற்றும் காலஞ்சென்றவர்களான குணரத்தினம், துரைராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, சரஸ்வதி மற்றும் காலஞ்சென்ற இளையதம்பி ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-11-2014 அன்று வெள்ளிக் கிழமை பி. ப. 2 மணி அளவில் அவரது இலத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக ஈச்சங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
இளையதம்பி நகுலன்
+1-416-559-1260