அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, June 9, 2026

துயர் பகிர்வு - புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை

சரசாலையைப் பிறப்பிடமாகவும் உசனை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது 90ஆவது வயதில் June 9, 2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான சிவப்பிரகாசம் - நாகமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

அமரர் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வரதன், விமலன், மஞ்சுளா, கிரிதரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், வ

ிஜிதா, வினோதினி, ராஜயோகன், தேவகி, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மித்திரன், அதிரா, ரிஷிபந், நிதாரா, ஆத்மீகா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும்,

அமரர்கள் குமாரசாமி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, மகேந்திரன், சிவராஜா, மற்றும் ஸ்ரீனிவாசன், இராசமோகன், பாக்கியலட்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் June 11, 2026, வியாழக்கிழமை அன்று காலை 8 மணிக்கு 384 Finley Avenue, Ajax L1S 2E4 என்று முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium and Visitation Center ல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் இறுதி நிகழ்வை இந்தத் தளத்தில் காணலாம்.
https://together.oneroomstreaming.com/ZVYNDA



Thursday, May 14, 2026

துயர் பகிர்வு - திருமதி கமலாதேவி தம்பிப்பிள்ளை

உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியர் கமலாதேவி தம்பிப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவல் எம்மையெல்லாம் ஆறாத் துயரத்தில் மூழ்க வைத்துள்ளது. கல்வியோடு நல்ல ஒழுக்கத்தையும் புகட்டிய இவரை உசன் மண் இழந்து தவிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனை வேண்டுகிறது. அதேவேளை அன்னாரின் இழப்பால் ஆறாத துயருற்றிருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.


Tuesday, May 5, 2026

துயர் பகிர்வு
சிதம்பரப்பிள்ளை திலகநாதன்

தோற்றம்: Jauary 28,1943 மறைவு: May 3, 2026

தென்மராட்சி, உசனைப் பிறப்பிடமாகவும், 23 - 32nd. Lane, வெள்ளவத்தை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் (Retired Deputy General Manager, Finace & Planning, Bank of Ceylon (BA, MBA, FSMS) அவர்கள் இறைபதமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் அமர்களாள முருகேசு சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அமர்களான சந்திரசேகரம் - நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருமதி மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தில்லைநடேசு (Swisterland) அவர்களின் சகோதரரும்,

திலாணி (UK), திலீபன்(Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Dr. சபேசன் (UK), தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷான், பிரம்மன், நீரஜா, தில்ஷயன், துவாரகேஸ் ஆகியோரின் பேரனாரும்,

சிவசாந்தி, அமர்ககளான கமலாசனி, தியாகராஜா, Dr. ராஜலக்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரது பூதவுடல் 23 - 32nd. Lane, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் May 6, 2026, புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, May 10, 2026, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணியவில் நிசலசெவன, கல்கிஸ்சை பொது மையானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கண்ணிருடன் வேண்டுகிறோம்.

ஓம் சாந்தி , சாந்தி, சாந்தி.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: +94777822456

அமரர் சிதம்பரப்பப்பிள்ளை திலகநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, May 3, 2026

துயர் பகிர்வு - சிவபாக்கியம் சுந்தரேசன்

உசனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தில் வாழ்ந்துவந்தவருமான சிவபாக்கியம் (பாக்கியம்) சுந்தரேசன் அவர்கள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் அமரர்களான சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகளும்,

சுந்தரேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷ்ணா (UK), தனுஷா (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர் சிவமலர், சிவராசா (சாவகச்சேரி), சிவலோகநாயகி (ஸ்கந்தபுரம்), அமரர் பாய்கியலக்குமி, விக்னேஸ்வரன் (மீசாலை), ஜெகதீஸ்வரன் (இத்தாலி), சிவராணி (இத்தாலி) ஆகியோரின் சகோதரியுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அமரர் சிவபாக்கியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Saturday, May 2, 2026

துயர் பகிர்வு - கண்மணி முத்துக்குமார்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கண்மணி முத்துக்குமார் அவர்கள் May 2, 2026, சனிக்கிழமை மாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர் முத்துக்குமாருவின் அன்பு மனைவியும்,,

மகாலக்குமி, அமரர் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதியாபரணம் (குணம்) அவர்களின் அன்பு மாமியும்,

அமரர்களான ஐயாத்துரை, பூரணம், இராசம்மா ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அமரர் கண்மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.