அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, July 28, 2015

கனடா ஒன்றியத்தின் நிர்வாகசபை கூட்டமும் ,மனிதநேய பணியாளர்களின் சந்திப்பும்



கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் ஒழுங்கமைப்பு கூட்டமும் .சமூக ஆர்வலர்கள் சந்திப்பும் கடந்த வாரம் மார்க்கம் நகரில் நடை  பெற்றது
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16 ம் திகதி நடைபெறப்போகும் கனடா வாழ் உசன் மக்களும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கப்போகும் இந்த நிகழ்வை  மேலும் சிறப்பாக நடத்தக்கூடிய செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துரையாடியதுடன் ,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் செயல்பாட்டுக்கு லண்டன் ல் இருந்து அனுசரணை மற்றும் ஆலோசனை வழங்கி எமக்கு பல உதவிகளை செய்த சமூக ஆர்வலரும் இங்கிலாந்தின் மனித நேய அமைப்பின் மூத்த உறுப்பினருமான சட்டத்தரணி .திரு .சதானந்தன் அவர்களை கௌரவித்தும் நன்றி தெரிவித்தும் கூட்டம் நடத்தப்பட்டது ,
தொடர்ந்து உசன் மக்களுக்கும் உசன் கிராமத்தை  அண்டிய பகுதி மக்களுக்குமான மனித நேய பணிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து நடத்தும் இணக்கப்பாடும் ஏற்பட்டுள்ளது .
தொடரும் சில மதங்களில் இந்த மனித நேய பணிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது ,
இந்த பணிகளுக்கு உதவி புரியும் லண்டன் வாழ் சட்டத்தரணி திரு.சதானந்தன் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .










Wednesday, July 15, 2015

செல்வன் சுஜீவன் அவர்கள் இறைபதம் அடைந்தார் ........

உசனை சேர்ந்த காலம்சென்ற திரு,திருமதி,சுப்பிரமணியம் (போலீஸ் மணியம் ) அவர்களின் பேரனும் , காலம்சென்ற திரு,ராதாகிருஷ்ணன் திருமதி சுதா தம்பதிகளின் மகனுமான செல்வன் சுஜீவன் அவர்கள் , சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்  , அன்னாரின் பிரிவால் துயரும் குடும்த்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் செல்வன் சுஜீவனின்  ஆத்மசாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம் .
இவ்வறிவித்தலை உசன் மக்களும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல்
ஸ்ரீ -மாமன் (கனடா)    001647-292-1265  / 0019052946397