அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, December 21, 2015

அமரர் இராஜேஸ்வரி ஜெயரூபன்

வந்தோரை வரவேற்கும் உசன் கிராமத்தில் நல்லப்பா பரம்பரையில் உதித்திட்ட, தென் மாகாணப் பிரபல வர்த்தகர் மாணிக்கம் ஜெயலட்சுமி தம்பதிகளுக்கு மலர்ந்திட்ட முத்துக்கள் தெய்வானைப்பிள்ளை சுந்தரலிங்கம், செல்வநாயகி சந்திரசேகரம், சண்முகநாதன் ராகினி, சிவானந்தசோதி மாலதி, ஜெகசோதி மாலதி, இராஜேஸ்வரி ஜெயருபன், ஜெகநாதன் கமலாதேவி, சிவபாலன் சுனேந்திரா ஆகியோர்.

இவர்களில் தங்கத்தில் தங்கமாக ஜொலித்தார் இராஜேஸ்வரி. இவர் "ஈசு" என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்டார். 09.03.1957 அன்று இராஜேஸ்வரி இவ்வுலகில் விடிவெள்ளியாக உதித்திட்டார்.

'விளையும் பயிரை முளையில் தெரியும்' என்ற பழமொழிக்கு அமைய கல்வி, கலை, ஒழுக்கம், குடும்ப கௌரவம் இதையெல்லாம் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்று சிறந்த ஒரு மேதாவியாகத் திகழ்ந்தார்.

முத்துத்தம்பி பெற்றெடுத்த முத்தான ஜெயருபனை பெரியோர்கள் நிச்சயிக்கத் திருமணம் புரிந்தார். அக்குடும்பத்துக்கு ஆண்டவன் அருளால் இரண்டு மாணிக்கங்களைப் பெற்றெடுத்தார். ஆண் வாரிசாக கௌரிபாலனையும் (பாலன்), பெண் வாரிசாக சிந்துஜாவையும் (சிந்து) பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றெடுத்தார். இரு பிள்ளைச் செல்வங்களையும் கண்மணிபோல் காத்து அவர்களுக்கு உணவூட்டும்போது கல்வி, அன்பு, பண்பு இவற்றையும் சேர்த்து ஊட்டினார். தனது சகோதரர்களை தாயாகவும், குருவாகவும் குடும்பமாக ஒரே குடைக்குக் கீழே வைத்திருந்தார்.

தனது மருமகனாகவும், மகனாகவும் தேவகுமார் என்பவரையும், மருமகளாக அனுசுயாவையும் கடவுள் அருளால் கிடைக்கப்பெற்றார். தனது சந்ததிக்கு அன்பு மகனான கௌரிபாலனுக்கு சஷ்மிகாவையும், டில்சியாவையும், அன்பு மகளான சிந்துஜாவுக்கு வைஷவி, வைசிகா, விபூஷாவையும் பேரப் பிள்ளைகளாகக் கிடைக்கப்பெற்றார்.

தன்னை நாடிவருபவர்களுக்கு உணவளித்து, அன்புடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தான் வாழ்ந்திட்ட பாரிஸ் - உசன் மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தார்.

பூவுலகில் எல்லாக் கடமைகளையும் செவ்வனே செய்து, 3 ஆம் திகதி மார்கழி மாதம் 2015 ஆம் ஆண்டு இரவு 9:30 மணியளவில் இறைவனடி சேர்ந்த தனது தகப்பனார், தாயாரோடு தானும் இறைவன் திருவடி சேர்ந்தார்.

உங்கள் பிரிவால் வாடும், மகன், மகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனிமார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.

உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம். பூமியில் மறுபடி பிறந்து சூரிய ஒளிபோல் ஒளிரவேண்டுமேன்று ஆண்டவனை வேண்டுகின்றோம்.

எங்கள் தாயாரின் பிரிவால் தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் கூறியவர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்".
தகவல்:
ஜெகசோதி (சோதி, சுவிஸ்) - +41 62 293 2716


Sunday, December 20, 2015

உசன் உறவுகள் 2015

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் "உசன் உறவுகள் 2015" நிகழ்வு எதிர்வரும் January மதம், 16 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு, சனிக்கிழமை இடம்பெற உள்ளது. Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உறுப்பினர்களையும், மற்றும் உசன் மக்களையும் ஒன்றியத்தின் நிர்வாகசபை அன்போடு அழைக்கின்றது.

இந்நிகழ்வில் நிகழ்சிகள் வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் செயலாளருடன் தொடர்பு கொண்டு தகவல்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை மாதாந்த அங்கத்துவத் திட்டத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் பொருளாளரோடு தொடர்பு கொண்டு இணைந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எந்தவிதத்திலாவது இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோரும் பொருளாளரோடு தொடர்புகொள்ள முடியும்.

உசன் உறவுகள் 2015 இல் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, December 6, 2015

உசன் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு





உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் இந்த வருடம் ஐந்தாம் ஆண்டு  புலமை பரிசில்  பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சிறப்பு பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது  , வருட இறுதி மதிப்பெண் அட்டை வழங்கும் நிகழ்வில் இந்த சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது ,பாடாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
உசன் பொது நூலக நிர்வாகசபை தலைவர் ,செயலாளர் கலந்து கொண்டு இந்த பரிசிலை வழங்கினர் , தொரடர்ந்து வரும் காலங்களில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு , பெறுமதியான சிறப்பு பரில்களை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்த கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துள்ளது .
பரீடசையில் சித்தியடைந்து பரிசினை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,





Friday, December 4, 2015

புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நிக்கும் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயம்


மிருசுவில் மற்றும் அதன் சுற்றுகிராம பங்கு மக்களின் புனித தலமாக விளங்கி காத்தருள் புரியும் புனித நீக்கிலார் தேவாலயம் போரினால் பாதிப்படைந்திருந்த நிலையில் , மிருசுவில் பங்கு மக்களின் முயட்சியாலும் திருச்சபையின்  ஒத்துழைப்புடனும் , தேவாலயம் 30 மில்லியன் ருபா செலவில் புனருத்தானம் செய்யப்பட்டுள்ளது , மிருசுவில் மண்ணின் இலட்சினையாக விளங்கும் இந்த தேவாலய திருப்பணிக்கு புலம்பெயர் மிருசுவில் மக்களும் கனடா வாழ் நீக்கிலார் பங்கு மக்கள் ஒன்றியமும் பெரும் பங்களிப்பு வழங்கி இந்த திருப்பணியை நிறைவேற்றியுள்ளனர் .
புதுபொலிவுடன் காட்சியளிக்கும்  திருத்தலத்தை முன்னாள் யாழ் மறை  மாவட்ட ஆயர் வண.பிதா தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது .
இந்த திருப்பணிக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கும் , மிருசுவில் நீக்கிலார் பங்கு மக்களுக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .







Monday, November 9, 2015

உசன் அறிவியல் "சிற்பி" ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ...


உசன் பாடசாலையின் வரலாற்றில் மறக்கமுடியா   ஆசானாகவும் ,அதிபராகவும் விளங்கி உசன் கிராம மக்களின் அன்புக்குரிய ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) ஐயா அவர்கள் இன்று (09-11-2015) காலமானார்,
அன்னாரின் காலத்தில் உசன் பாடசாலையில் மாணவர்களின் கல்விவளர்ச்சி மிக அதிகமாக இருந்ததுடன் ,உசன் பாடசாலையின் கீதத்தையும் இயற்றியவர் , கிராம மக்களுடன் அன்பாக பழகியதுடன், தமிழ் மற்றும் இலக்கிய துறையில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தார் ,
சிற்பி ஐயா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சி.சிவசரவணபவன்அவர்களிடம் கல்விகற்ற மாணவர்கள் பலர் தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளனர் ,
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துகொள்வதுடன் 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்துகொள்கிறோம் . 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும்.

1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ். வைத்தீசுவரக் கல்லூரி என்பவற்றில் புகழ் பூத்த அதிபராக விளங்கினார்.
 ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், சஞ்சிகையாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர்.  பலரை இலக்கியத்துறைக்குள் ஈடுபடுத்தியவர்.
சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது.யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்த ”இந்து சாதனம்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொழிற்பட்டார்
1953 இல் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் கல்விகற்கும் வேளையில் இளந் தமிழன் என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது.
ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
சிற்பி என்ற பெயரிலேயே பல சிறுகதைகளையும் உனக்காக கண்ணே என்ற பிரபல நாவலையும் எழுதிய இவரது முழுப்பெயர் பிரம்மஸ்ரீ  சிவசுப்பிரம்மண்ய ஐயர் சிவசரவணபவன் . தாயார் சௌந்தராம்பாள் ஆவார்.
யாழ்வாசி என்ற புனை பெயரிலும் பல ஆக்கங்களை படைத்த இவர் பல விருதுகளை பெற்றவர். இவர் ஈழத்து சிறுகதை வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் எழுதி வந்தவர்.இறக்கும் போது இவருக்கு வயது 82


Saturday, October 17, 2015

உசனில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு


இலங்கை நாடாளுமன்றத்தின் அமர்வுகளின் மாதிரியை ,பாடசாலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுவரும்"மாதிரி நாடாளுமன்ற அமர்வு " உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது , நாடாளுமன்ற அங்கத்தவர் தெரிவு வாக்கெடுப்பு ,வாக்குபதிவு , சத்தியப்பிரமாணம் , கட்சி விவாதம் ,என இலங்கை அரசியல் அமைப்புக்கு  ஏற்ப பல நாடாளுமன்ற செயல்பாடுகளை
இலகுவான முறையில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது .
உசன் மாணவர்கள் இந்த நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டனர் ,
பாடசாலை அதிபர் .திரு.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியில் இந்த நிகழ்வுக்குரிய அனுமதியை கல்வித்திணைக்களம்  உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்துக்கு வழங்கியிருந்தமை பாராட்டுக்குரியது ,







Dr.திருமதி,துஷியந்தி மிகுந்தன் (Professor/ Dean)அவர்களை வாழ்த்துகிறோம் .


உசனை சேர்ந்த திரு.திருமதி .பேரம்பலம் அவர்களின் புதல்வியும் ,உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவியுமான,Dr.திருமதி ,துஸ்யந்தி மிகுந்தன் அவர்கள், விவசாயபீட பேராசிரியராக (Professor)நியமனம்பெற்றதுடன் ,
யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட "பீடாதிபதியாக"( Dean Of Agriculture faculty) பொறுப்பேற்றுள்ளார்.  
திருமதி ,துஸ்யந்தி அவர்கள் ஏற்கனவே கலாநிதி (DR) பட்டம் பெற்றதுடன் தனது திறமை காரணமாக வெளிநாடுகள் பலவற்றுக்கு சென்று சிறப்பு பயிற்சிகளையும் பெற்றதுடன் , நீண்ட காலமாக பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார் .
இவரின் பதவி உயர்வு கண்டு நாம் மகிழ்வு கொள்வதுடன் , கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் வாழ்த்துக்களை நேரடியாக தெரிவிக்க ...
tmikunthan@yahoo.co.in
0094212222404
..




உசன் மாணவர்களின் "இன்னியம்"மரபு இசை குழு

தமிழரின் பாரம்பரிய மரபு கலையாகிய "இன்னியம்" என்னும் கலை காணாமல்  போகும்  நிலையில் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் .இந்த "இன்னியம்" மரபு கலை இசையை மாணவர்கள் மிக கட்சிதமாக வாசிப்பதை காணமுடிகிறது , யாழ் மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இந்த இசை குழுவை காணமுடிகிறது , எமது பாடசாலையும் மரபு கலை இசை கருவிகளை கையாண்டு தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது மகிழ்ச்சி தருகிறது.
இந்த இன்னியம் இசை குழுவை உருவாக்கிய அதிபர்,ஆசிரியர், வாத்திய கலைஞர்கள்,சீருடை அன்பளிப்பு செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இங்கே "இன்னியம்" இசை குழு வரவேற்பு இசை முழங்குவதை காணமுடியும் .
 


Monday, October 12, 2015

உசன் முருகனின் "இராஜகோபுர " திருப்பணி ஆரம்பம்

உலகெங்கும் வாழும் உசன் கந்தசுவாமி அடியார்களே!
தெய்வீகம் சுரக்கும் யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேசத்தின் உசன் புண்ணிய பதியில் அருளாட்சி நல்கும் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவஸ்தானத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்று இப்போது ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயங்கர யுத்த சூழலிலும் உசன் கிராமத்துக்கும், மக்களுக்கும் பாதிப்புகளின்றிக் காப்பாற்றி, புலம் பெயர் தேசங்களிலும் உங்களைச் செல்வச் செழிப்போடு காத்தருளும் எம் பெருமான் முருகனுக்குத் தனிச் சிறப்பு மிகு இராஜகோபுரம் அமைக்கும் பணி நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. இப்பொழுது உசன் கிராமத்தில் தலை நிமிர்ந்து அருள்பாலிக்க எம்பெருமானின் அனுக்கிரகம் கைகூடி இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன், ஆலய புனருத்தாரண வேலைகளும், புது பொலிவூட்ட வர்ண பூச்சு வேலைகளும் நடைபெற்று வருகிறன. இந்தியாவிலிருந்து வரவளைக்கப்பட்ட தேர்ச்சி மிக்க ஆச்சாரியர்களால் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
உசன் முகனின் ஆசியுடன் வாழும் உங்களின் பங்களிப்பும் இந்த இராஜகோபுர பணியில் கலந்திட நீங்கள் விருப்பம் கொண்டால் தாராளாமாக இந்த திருப்பணியில் இணைந்து கொள்ள முடியும். உங்களின் கரங்களால் எந்த விதமான காணிக்கை செலுத்தினாலும் அது எம்பெருமானின் புனருத்தாரணப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மிக வேகமாக நடைபெற்று வரும் திருப்பணி பூர்த்தியடைந்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஆசி கூடியுள்ளது. முருகனின் இராஜகோபுரம் உயர்வது போன்று உங்கள் வாழ்க்கையும் உயர எம்பெருமான் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய தர்மகர்த்தாவைத் தொடர்புகொள்ளவும்.
திரு.கு.விமலதாஸ் -0094773474767
Commercial Bank A/C# 8600930636
Chvakachcheri Branch

கனடாவில் இருந்து இத் திருப்பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ள முடியும். சேவைக் கட்டணமின்றி பணம் அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
திருமதி சி.சாந்தினி -905-554-2014


Saturday, October 10, 2015

உசன் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்


எமது உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தி பெற்றிருப்பது மீண்டும் எமது பாடசாலை பழைய நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை கொள்ள வைக்கிறது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களான , திரு,திருமதி நடேசலிங்கம் ஷோபனா தம்பதிகளின் புதல்வன் செல்வன். கரிகரன் (170)  ,செல்வி.விநாசித்தம்பி பிருந்துவி(158) ஆகிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,இவர்களுக்கு பக்க பலமாய் இருந்த வகுப்பாசிரியர் திருமதி,ஷீலா பிரபாகரன் ,பாடசாலை அதிபர் ,பெற்றோர்களுக்கு எமது வாழ்த்துக்கள்,
 பாடசாலைக்கு மாணவர்களும் குறிப்பாக பெற்றோரும் .உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் . உயர்தர பரீட்சை பெறுபெறுகளிலும் தன்னால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என பாடசாலை அதிபர் நம்பிக்கைவெளியிட்டார் .


Friday, September 25, 2015

செல்வன்:கஜன் சுதோகுமார்(பாபு) அவர்களுக்கு வாழ்த்துக்கள்

உசனை சேர்ந்த வைத்தியர்  திரு,திருமதி .சுதோகுமார்(பாபு) சாந்தாமணிதேவிதம்பதிகளின் புதல்வன் செல்வன்,கஜன் அவர்கள் Electronic and Telecommunication Engineering துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளார் ,இலங்கை Moratuwa பல்கலை கழகத்திலும் ,பின்னர் சிங்கப்பூர் 
தேசிய பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றதுடன் , ஜப்பானிலும் தேர்ச்சி பயிட்சிகளை பெற்று . முதல் தர பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார், 
செல்வன் ,கஜன் அவர்கள் சிறு வயதிலிருந்தே சிறந்த பேறுபெற்ற பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,
G.C.E O/L பரீட்சையில் 10 A பெறுபேற்றையும் ,G.C.E A/L பரீட்சையில் 3A பெறுபேற்றையும் பெற்றுள்ளார் .
செல்வன் .கஜன் அவர்கள் இன்னும் சாதனை படைக்க உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .
செல்வன்.கஜன் அவர்களின் திறமை எமது உசன் கிராமத்துக்கும் கிடைக்கவும் 
அவரின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த பெற்றோருக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. 


Sunday, September 20, 2015

கனடாவில் உசன் மக்களின் "பூபந்து பயிற்சி வகுப்பு ஆரம்பம் "

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  "Usan Sports Club" ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான பூப்பந்து (Badminton) எதிர்வரும் செவ்வாய்கிழமை (September 22 ம் திகதி ). கடந்த வருடம் நடைபெற்ற அதே இடத்தில்  Markham Road மற்றும் Elson Street சந்திக்கருகில் 18 Coxworth Ave, Markham என்ற முகவரியில் உள்ள Parkland Public School ல் ஆரம்பமாகவுள்ளது  பயற்சியில் சிறுவர்கள், பெரியோர்கள், இளையவர்கள் என பலரும் குடும்பமாகவும் கலந்துகொள்ளமுடயும் . அனுமதி பெற்ற பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் உடல் பயிற்சியுடன், பூபந்து பயிற்சியும் வழங்கவுள்ளனர் .
கடந்த வருடம் தொடங்கிய இந்த பயற்சியில் கலந்த வீரர்கள் குறுகிய காலத்திலேயே கனடாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும் , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் மிக குறைந்த கட்டணத்துடன் உசன் மக்களுக்கு வழங்கும் சேவையாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் இன்னும் 15 இடங்கள் உள்ளன. எதிர்வரும் வாரத்துக்கிடையில் உசன் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் ஏனையவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். எனவே நீங்களும் இந்த சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் .

தொடர்புகளுக்கு :
உமாபதி -647-869-2441
சிவா -416-908-6919
அஜந் -416-833-2120





Sunday, September 6, 2015

குமாரசாமி இரவீந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

குமாரசாமி இரவீந்திரா அவர்கள் யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராகப் பதவி உயர்வு பெற்றுக்கொண்டதற்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவருக்குத் தனது வாழ்த்துக்ககளைத் தெரிவித்துக்கொள்கிறது.

உசன் முன்னாள் கிராமசேவகர் காலஞ்சென்ற கதிரித்தம்பி குமாரசாமி, உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியை காலஞ்சென்ற திருமதி புவனேஸ்வரி குமாரசாமி ஆகியோரின் மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்றார். தனது இரண்டாம் நிலைக் கல்வியை யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யா/ பரியோவான் கல்லூரியிலும் மேற்கொண்ட இவர் யாழ் பல்கலைக் கழகத்தில் BSc பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதன் முதலில் யா/ பரியோவான் கல்லூரியில் உயர் தர வகுப்பு ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் தொடர்ந்து யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கணித ஆசிரியராகப் பணி புரிந்தார். அதனைத் தொடர்ந்து யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வியறிவூட்டிய இவர் யா/ சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலய அதிபராகப் பதவி உயர்வு பெற்றுப் பெருமை சேர்த்துக்கொண்டார்.

தற்போது யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராக மிகக் குறுகிய காலத்தில் பதவி உயர்வைப் பெற்றுக் கொண்டது இவரது நிர்வாகத் திறனையும், கடமை உணர்வையும் தெளிவாகக் காட்டுகின்றது.


Tuesday, September 1, 2015

"பரத சந்த்யா" நடன நிகழ்வு

உசனைப் பூர்வீகமாகக் கொண்ட பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி, திருமதி. சியாமா தயாளன் அவர்களின் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "பரத சந்த்யா" நடன நிகழ்வு September 12, 2015, சனிக்கிழமை அன்று இடம்பெற உள்ளது. 1355 Harwood Avenue North, Ajax நகரில் அமைந்திருக்கும் J. Clarke Richardson Collegiate மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும். மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த நிகழ்வில் உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அற்புதமான நடனங்கள் இடம்பெற உள்ளன. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி. சியாமா தயாளன் உசன் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்.

மேலதிக தகவல்களுக்கு shiyama.thayaalan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்.

"பரத சந்த்யா" நடன நிகழ்வு பெரு வெற்றி பெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, August 28, 2015

மரண அறிவித்தல்


உசனை சேர்ந்தவரும் உசன் கிராம அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றி வரும் வைத்திய கலாநிதி திரு.இந்திரன் ஆசீர்வாதம் அவர்களின் மாமியார் 
கனடாவில் காலமானார் , அன்னாரின் இறுதி பிரார்த்தனை நாளை சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 12 மணிவரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் .....
தகவல் : Dr.இந்திரன் ஆசீர்வாதம் 


உசனில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கியது


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அடுத்த செயல் திட்டமாக உசன் கிராமத்து மக்களுக்கும் அதன் அயல் கிராம மக்களுக்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் செயல் திட்டம் ஆரம்பமாகியது , தலைவர் திருமதி. மீரா தேவரஞ்சன் தலைமையில் உசன் மக்கள் முன்னிலையில் வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டது , நிகழ்வில் ஊர் பெரியவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர் 
  







Thursday, August 27, 2015

உசனில் "ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு..... ஆரம்பம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அடுத்த செயல் திட்டமாக உசன் கிராமத்து மக்களுக்கும் அதன் அயல் கிராம மக்களுக்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் செயல் திட்டம் வரும் செப்டம்பர் 1 ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.. இந்த இலவச பயிற்சி நெறியில் வயது வேறுபாடின்றி யாவரும் கலந்து பயன் பெறமுடியும்.இந்த திட்டம் குறித்த வடிவம் ......விருப்பமானவர்கள் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலத்தை தொடர்புகொள்ளவும் ,
இடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ..பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 

"ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு........பயிற்சி நெறி திட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
உசனிலும் அதன் சுற்று கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் திட்டம், பாடத்திட்டம் தவிர்த்து ஆங்கில பேச்சு திறன்,எழுத்து திறன்,உரையாடல் ஆகிய துறைகளை இலகு ஆங்கில முறை மூலம் அனைவர்க்கும் பயிற்ருவிக்கும் நோக்கம் கொண்ட இந்த முயற்சி ..

நோக்கம்  
---------------------------
1. உசன் மக்கள் அனைவர்க்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்தல்
2.இலவசமாக கற்பித்தல்
3.நவீன ஆங்கில கற்பித்தல் முறையை அறிமுகபடுத்தல்
4.இலகு முறை ஆங்கில கல்வியை ஊக்குவித்தல் .
5.ஆங்கில அறிவு போட்டிகளை நடாத்தி ஊக்குவித்தல்
6.வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து உசன் கிராமமக்களுக்கு ஊக்குவிப்பு சலுககைகளை பெற்றுகொடுத்தல்
7. வகுப்பு தவிர்ந்த , நவீன video, documentry,cartoone, dvd, movies, discovery
 போன்ற அறிவியல் உலகை இலவசமாக காண்பித்தல்


செயல்திட்டம்
---------------------------
1. உசன் பொதுநூலக நிர்வாகசபை நிர்வகிக்கும்
2. பொறுப்பாக திரு.ரொனால்ட் அவர்கள் கடமையாற்றுவார் ,
3. ஆசிரியராக செல்வி.பா.தண்மதி பொறுப்பு வகிப்பார்
4. வாரத்தில் 3 நாட்டகள் 1.1/2 மணி நேரம் வகுப்பு இயங்கும்
5. தற்காலிகமாக உசன் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இயங்கும்

நிதி நிர்வாகம்
--------------------------
1. மாதாந்த ஆசிரியர் கொடுப்பனவு 5000 ரூபாய்
2. நவீன Multimedia உபகரணம் தேவை
3. எதிர் காலத்தில் இது வெற்றிகரமாக நடை பெற்றால் பண்டிதர் பொது நூலக வளாகத்தில் சிறிய கட்டிடம் அமைத்தல் .
4. இந்த நிதி பொறுப்புகள் யாவும் அமரர் ஆசீர்வாதம் அவர்களின் நினைவாக
நன்கொடையாக
(வைத்தியர் திரு இந்திரன் ஆசீர்வாதம் அவர்கள்  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்குவார் )_
5.  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் இதனை வழிநடாத்தும் பொறுப்பாக திரு.அஜந்தன் வெற்றிவேலு கடமையாற்றுவார்
6. இந்த முயற்சியில் பங்கேற்றக நன்கொடை வழங்க ,அறிவுரை , மேலதிக திட்டங்களை ஊக்குவிக்க அனைவர்க்கும் சந்தர்ப்பம் உண்டு
7. எந்த விதமான இலாப நோக்க செயல்பாடுகளும் இத் திட்டத்தில் இடம் பெற அனுமதி இல்லை

கட்டுப்பாடு
-------------------
1. உசன் மற்றும் அயல்கிராம மாணவர்கள் , பொதுமக்கள் என வயது வேறுபாடின்றி பலன் பெறலாம்
2. கட்டாயம் உசன் பொது நூலக அங்கத்தவராக இணைய வேண்டும்
3. வகுப்புகளுக்கு ஒழுங்காக வரவேண்டும்,
4. திட்டத்தை தவறான முறையிலோ,உதாசீனமாகவோ , கேளிக்கையாகவோ,
மற்றவரை குழப்பும் வகையிலோ செயல்பட்டால் ..நிர்வாகசபை அவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு.
5. நிர்வாகசபையின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இருக்க வேண்டும்

6. வகுப்பில் அனைவரும் ஒரே தகுதியாக கணிக்கப்படும் 


Saturday, August 22, 2015

உசன் மக்களின் ஒன்றுகூடல் காணொளி பதிவு

கனடா வாழ் உசன் மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது ,இந்த நிகழ்வின் சில காட்சி பதிவுகள்


Wednesday, August 19, 2015

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடல் 2015

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நாள் முழுவதும் சிறப்பான ஒடியல் கூழ், சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. விசேட நிகழ்வாகக் கயிறிழுத்தல் போட்டியும் உற்சாகமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உசனைச் சேர்ந்த ஐயாத்துரை தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் செயற்பாடுகளைப் பாராட்டினார். அத்தோடு உசன் மக்களின் பண்பாடு, நேர்மை குறித்தும் பெருமையாகக் கூறினார். சிறப்பு விருந்தினராக உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவியும், ஆசிரியையுமான திருமதி விஜயராணி இளையதம்பி அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கினார். புலம்பெயர் தேசத்தில் உசன் கிராமமக்களின் ஒற்றுமை, பண்பாடு, வாழ்க்கைமுறை தனக்கு அக மகிழ்ச்சி தருவாதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து கௌரவ விருத்தினராக வருகை தந்த சட்டத்தரணி திருமதி வாசுகி தேவதாஸ் அவர்கள் கனடாவில் இருக்கும் தென்மராட்சி அமைப்புக்களில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா மிகச் சிறப்பாகச் செயற்படுவதைத் தான் அவதானித்ததாகத் தெரிவித்து தொடந்தும் உசன் மக்களுடன் இணைந்திருக்கத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலின் சிறப்பு நிகழ்வாக உசனில் வாழ்ந்து தனது பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கி, அவர்களில் இரண்டு பிள்ளைகளை ஒரே நேரத்தில் இலங்கையின் சிறந்த ஆசிரியர்கள் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட தந்தையான திரு முத்துத்தம்பி ஒப்பிலாமணி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார். தன்னையும், தனது பிள்ளைகளையும் சரியாக இனம்கண்டு மதிப்பளித்தமைக்குக் கனடா வாழ் உசன் மக்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு வெற்றி கிண்ணமும், Usan Sports Club ஆல் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கும், சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கும் சிறப்பு கேடயங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Vedio Maruty - Vel Kirupa www.facebook.com/VideoMaruty
A. A. V. Party Rentals - Nagulan Ilaiyathampy
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan

இவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.