அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, November 8, 2009

திரு. வாரித்தம்பி சின்னத்துரை அவர்களின் மரணஅறிவித்தல்.

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட வாரித்தம்பி சின்னத்துரை அவர்கள்  11.07.2009 சனிக்கிழமை உசனில்  காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி� செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரரும் காலஞ்சென்ற நவமணியின் அன்புக் கணவரும் விநாசித்தம்பி� சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கேதீஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (குணா), பவானி, முனீஸ்வரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா), கோமதி (கனடா), திருகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவச்செல்வி, சிவராணி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனும் துவாரகா, மிதுரா, துசாணி,����� யதூபிகா, தாருகா, அனோஜன், அர்ச்சயன், அகல்ஜன், ஜெனீசன், பிரணவன், பிரவீனா, ஜனனி, சங்கவி, டிதேனுகா, பிருந் தாபன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.07.2009) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்� ஈச்சங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்:
சு.அருணாசலம் (மருமகன்),
(அருண்ரெக்ஸ், கொடிகாமம்).
உசன்.


Monday, October 26, 2009

திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி அவர்களின் மரணஅறிவித்தல்

உசனை சேர்ந்த திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி (உசன் கஜகேணி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்கள் 2009-10-25 அன்று உசனில் காலமானார்.

      அன்னார் காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும் நிர்மலாதேவி, நித்தியானந்தன், கருணானந்தன்(கருணா) கனடா, சிவானந்தி, சயிந்தாதேவி ஆகியோரின் அன்புத்தந்தையும் சுந்தரலிங்கம், சாரதாதேவி, லோஜனி, பரஞ்சோதி, காலஞ் சென்ற சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசநாதன், சிவபாதசுந்தரம், தங்கராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற் றும் மகேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

 திருமதி சயிந்தாதேவி சிவபாதசுந்தரம்(மகள்). உசன், மிருசுவில்.


Sunday, October 4, 2009

திருமதி பொன்னையா செல்லாச்சி அவர்களின் மரண அறிவித்தல்

உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லாச்சி அவர்கள் 04.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற பொன்னையாவின் அன்புமனைவியும்,
காலஞ்சென்ற நாகமுத்து, சரவணமுத்து, தெய்வானைப்பிள்ளை, வாலுப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்னம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பரமேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரி, மற்றும் பத்மநாதன்(கனடா), பாலகெளரி, பற்குணசீலன்(மணியம் களஞ்சியம் - கொடிகாமம்), புஸ்பகுமார்(ஜேர்மனி), பவநந்தி, அன்பரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
திருச்செல்வம்((பிரான்ஸ்), செல்வராஜா(வவுனியா), வசந்தக்குமாரி(கனடா), கதிர்காமநாதன், இன்பமலர், மல்லிகாதேவி, யோகேஸ்வரன், நாகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஜெயமுகன்(டென்மார்க்), கேசவன்(இத்தாலி), பவித்ரா(பிரான்ஸ்), கஜீறதன், செந்தூரன், ஜெயந்தூரன், மயூறன், திவாகர், தினேஸ்(கனடா), செந்தில், எழில், யதுசிகா, யதுகோபன், யதுசரன், செந்தூரிகா, அஜந்திகா(ஜேர்மனி), டினோஜன்,, நிறோஜன், சுதட்ஷா, விதுஷா, திரிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தொடர்புகளுக்கு

பத்மநாதன் — கனடா
14167557465 +14167557465


Friday, October 2, 2009

திரு.விநாசித்தம்பி நடராசா(துரை) அவர்களின் மரணஅறிவித்தல்

உசனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.விநாசித்தம்பி நடராசா (இளைப்பாறிய விவசாய விஸ்தரிப்பு சேவையாளர்) அவர்கள்,01 /10 /2009 அன்று உசனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி- சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் கனகேஸ்வரி, கனகலிங்கம் (சிவலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்ற பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி (சுவிஸ்), சுமதி (லண்டன்), லஜன், காண்டீபன் (U.S.A), கடாட்சன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் அமிர்தலிங்கம், சிவபாலன் (சுவிஸ்), சந்திரசேகர் (லண்டன்), கஜேந்தினி (ஆசிரியை, யா/கோண்டாவில்C.C.T.M.S) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


 தகவல்: லஜன் (அண்ணா) சிவலி. உசன், மிருசுவில்.


Monday, September 14, 2009

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்த ஆளுநர் இணக்கம் தெரிவிப்பு

யாழ் குடாநாட்டில் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஏற்னவே மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களது வசதி கருதி நீக்குவது, தளர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறியுடனான சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற ஆளுனருடனான சந்திப்பின்போது, யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், டக்ளஸ் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 79 கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று யாழ் நூலகக் கட்டிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, தீவகப் பகுதி உட்பட யாழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவற்றில் சில முக்கிய விடயங்கள் பற்றி, விரைவில் யாழ் கடற்படை கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பிரகாரம், குடாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள்
*கச்சாய் துறைமுக வீதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பாவனைக்காகத் திறத்தல்
*கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கச்சாய் பாதையோர முட்கம்பிகளை அகற்றல்.
*உசன் - கெற்பேலி வீதியை மக்கள் போக்குவரத்திற்காகத் திறத்தல்
*உசன் இராமநாதன் கல்லூரிக்குரிய காணியை விடுவித்தல்,

கரம்பகம், எழுதுமட்டுவாழ், ஒட்டுவெளி, நாகர்கோவில், மருதங்கேணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் உடன் அகற்றப்பட்டு மக்களை மீள்குடியேற்றுதல்

என்பனவற்றுக்குகான இணக்கம் காணப்பட்டது .