அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 29, 2006

"உசன்பதி முத்துமாலை" நூல் வெளியீடு


உசன் கிராமத்தின் வரலாறுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும்,கடந்துவந்த நிகழ்வுகளையும் பொக்கிசமாக்கும் முயற்சியின் முதல் படியாக திருமதி.சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா)அவர்களால் "உசன்பதி  முத்து மாலை" எனும் நூல்உருவாக்கப்பட்டது .

இதன் வெளியீட்டு விழா ,2006 வைகாசி கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உசன்   இராமநாதன்    மகாவித்தியாலய பழைய மாணவர்கள் ,கல்விமான்கள் ,கனடா வாழ் உசன் மக்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.