அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, November 27, 2010

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தின் 2010 ம் ஆண்டின் வருடாந்த திருவிழா நவம்பர்  27 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது . நீண்ட கால  இடைவெளிக்கு பின்னர் மிருசுவில் மக்கள் மிகவும் உற்சாகமாக திருவிழாவில்


 பங்குபற்றி  வருகின்றனர் . இத் திருவிழா  மிகவும் சிறப்பாக நடைபெற உசன் மக்கள் சார்பாக கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ஆண்டவனை பிரார்த்திக்கிறது .மிருசுவில் அனைத்து கிறிஸ்தவ அன்பர்களுக்கும் எமது சிறப்பு வாழ்த்துக்கள்





Monday, November 15, 2010

உசனுக்கு உவந்தளிக்கும் திரு.கு.விமலதாஸ்


உசனில் மிகவும் அத்தியாவசிய தேவையான -ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்துக்கு என ஒரு கட்டிடம் அமைப்பத்தற்கு உசன் கனடா வாழ் மக்கள் ஒன்றியம் முன் வந்த போதிலும் அவ் நிலையத்துக்கு என பதிவு செய்யப்பட்ட நிலம் இல்லாமையினால் அவ் வேலைத்திட்டம் ஆனது செய்ய முடியாத நிலை இருந்தது இப்பொழுது உசனில் வசிக்கும் உசன் கந்தசாமி கோவிலின் தர்மகத்தாவான திரு.கு.விமலதாஸ் அவர்கள் தாமாக முன் வந்து சுமார் ஒரு பரப்பு காணியை வழங்கி உள்ளார் அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாகவும் உசன் ஊர் வாழ் மக்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவிக்கிறோம் அத்துடன் அக்காணியை எமது ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக செயலளரான அ.பிரபகரனிடம் கையளிப்பதையும் அத்துடன் எமது கழக உறுப்பினர்களும் நிற்பதை படத்தில் காணலாம் தற்பொழுது சனச்மூக நிலைய கட்டிடம் அமைப்பதற்கு வசதி ஏற்பட்டுள்ளதால் உசன் கன்டா வாழ் மக்களாகிய உங்களிடம் எமது கழகம் சார்பாக இவ் உதவியை நாடி நிற்கிறோம் ...
கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக திரு விமலதாஸ் அவர்களுக்கு எமது நன்றிகள்


Sunday, November 14, 2010

கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு (Mississauga / Brampton )


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் Mississauga /Brampton பகுதி உறுப்பினர்களுக்கான
சந்திப்பு நவம்பர் 14 ம் திகதி நடைபெற்றது. இதில் உசன் அபிவிருத்திகுறித்தும்.
கனடா ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மிகவும் உற்சாகமாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் தமது ஒத்துளைப்பை வழங்கினார்கள்.

மேலதிக  படங்கள் http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=47585&id=100001219521044


கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் Maple /Woodbridge பகுதி உறுப்பினர்களுக்கான சந்திப்பு நவம்பர் 14 ம் திகதி நடைபெற்றது. இதில் உசன் அபிவிருத்திகுறித்தும்.கனடா ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மிகவும் உற்சாகமாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் தமது ஒத்துளைப்பை வழங்கினார்கள்.

மேலதிக  படங்கள் http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=47584&id=100001219521044


Saturday, November 13, 2010

கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு

உசனில் இன்றைய நிலை தொடர்பாகவும் கனடா மக்கள் ஒன்றியத்தின். எதிர்கால செயல்பாடுகள் மற்றும் உசனில் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாக .உசன் மக்கள் ஒன்றியம் தனது அங்கத்தவர்களை , பிரதேசரீதியாக கனடாவில் சந்தித்து கருத்துகளை பரிமாறிவருகிறது. மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் இதில் பங்கேற்று வருகின்றனர் . அந்த வகையில் நவம்பர் 14 ம் திகதி  Mississauga /Brampton நகர மக்களை சந்திப்பதற்காக Dunddas & HW 10 சந்திப்பில் இல 2584 Rugby Rd இல் அமைந்துள்ள yarl co -cop மண்டபத்திலும் அத்துடன் அதேதினம் Maple Woodbridge மக்களை சந்திப்பதற்காக Jane & Majermac சந்திப்பில்இல 46 Madeira Ave வில் மாலை 6 மணிக்கும் கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .எனவே உசன் மீது அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பில் கலந்து உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
மேலதிக தொடர்புகளுக்கு : பத்மன் சரவணமுத்து
905 803 0204 647 219 2027
அயு வெற்றிவேலு
4168332120


Thursday, November 11, 2010

திருமதி செல்வபாக்கியம் அவர்களின் மரணஅறிவித்தல்.

  உசனைசேர்ந்த கந்தையா செல்வரத்தினம்(நெசவாலை வல்வை/Srilankan Redcross)) அவர்களின் அன்பு மனைவி திருமதி செல்வபாக்கியம்.அவர்கள்11 நவம்பர் 2010 அன்று லண்டன் UK யில் காலமானார்.
அன்னார் அச்சுவேலியை சேர்ந்தவரும் முன்னால் யாழ் வைத்தியசாலையின் முதுநிலை தாதியும், உசனை சேர்ந்த குணரத்தினம் (வட்டக்கச்சி), நவரத்தினம் (இறைவரி திணைக்களம்) மற்றும் அரியரத்தினம் (RDA) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர் .
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு உசன் மக்கள் ஒன்றியம் - கனடா
தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தொடர்புகளுக்கு :
பகி, ஜீவா , பாபு - மகன்மார் - 44 208 9048638
யசோ - பெறாமகன் - 416 493 7084


Saturday, November 6, 2010

உசன் கந்தசுவாமிகோவில் ஸ்கந்தசஷ்டி உற்சவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் சரித்திரப் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், செல்லச்சந்நிதி முருகன் கோவில், உசன் கந்தசுவாமிகோவில் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், இனுவில் கந்தசுவாமி கோவில், யாழ்நகர் கதிரேசன் கோவில் உட்பட பல ஆலயங்களில் இன்று (6ம் திகதி) ஸ்கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பமாகி ஆறு தினங் கள் உற்சவம் நடைபெறவுள்ளது.
இவ்வாலயங்களில் நான்கு சாம பூஜை, விசேட அபிஷேகம், தீப ஆராதனை, மூத்த புராணப்படிப்பு, ஆன்மீக சொற்பொழிவுகள், சுவாமி உள்வீதிவருதல் என்பன தினமும் நடைபெறவுள்ளன. இறுதிநாள் சூரன்போர் உற்சவ மும் சுவாமி வெளிவீதி எழுந்தரு ளலும் இடம்பெறும்


Monday, November 1, 2010

வைத்தியகலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை வாழ்த்துகிறோம்

உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின்
”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சினால் சிறந்த சேவை, சிறந்த வைத்தியம் ஆகியவற்றைப் பாராட்டி 2010 ம்ஆண்டின் சிறந்த குடும்பவைத்தியராகத் தெரிவுசெய்யபட்டு அரசினால் பாராட்டுசான்றிதழும் வழங்கி கெளரவிக்கபட்டுள்ளார்.
உசன் பெற்றெடுத்த ஒரு மைந்தன் இன்று உலகப் புகழ் பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா பெருமை கொள்வதுடன், எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை வாழ்த்த விரும்புபவர்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கலாம். mailto:drpara4@yahoo.co.uk