அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 2, 2007

"வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு" நூல் வெளியீடு

உசன் கிராமத்தின் வராலாறுகளை. எதிகால சந்ததிக்கு தருவிக்கவும்,அதனை ஆவணமாக்கி உசன் வரலாறை  உலகமே அறியும் முகமாக, அதிபர் திரு.க.பேரம்பலம் அவர்களின் அயராத முயற்சியில் உருப்பெற்ற "வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு"  எனும் நூல் வெளியீடு 02 .09 .2007 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மண்ணடபத்தில் . மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
                                முன்னாள் உதவிகல்வி பணிப்பாளர் திரு.சி.இராஜநாயகம் தலைமையில் நடந்த இன் நிகழ்வில் பிரதமவிருந்தினரக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. க. மாணிக்கம் அவர்களும் சிறப்புவிருந்தினராக
தென்மராட்சி பிரதேச செயலர் திரு.சே.ஸ்ரீநிவாசன் மற்றும் தென்மராட்சி கல்விப் பணிப்பாளர் திருவாட்டி  அ. வேதநாயகம் அவர்களும் கலந்து கொண்டனர் .
பெருந்திரளான உசன் மக்களின் ஆதரவுடன் நடைபெற்ற  இன் நிகழ்வில் தென்மராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .