அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 29, 2013

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திறப்பு விழா

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உசன் மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திட்டம் முதற்கட்ட முடிவை எட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.

January மாதம் 3 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு வைபவரீதியாக இந்த நூலகம் திறந்து வைக்கப்படும்.

நூலக நிர்வாகக் குழுத் தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான மு. க. சிவானந்தம் அவர்கள் இந்த நிகழ்வை வழிநடத்துவார். உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ இ. கேதீஸ்வரக் குருக்கள், உசன் செபமாலைதாசர் மாகாண இல்லத்தின் மாகாணத் தலைவர் வணபிதா கொட்வின் நைல்ஸ் (Godwin Niles) ஆகியோரின் ஆசி உரையுடன் இந்த விழா ஆரம்பமாகும். நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி ஐ. ஜெபநாமகணேசன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்துவார். உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபர் திரு. த. சோதிலிங்கம், உசன் ஐக்கியநாணய சங்கச் செயலாளர் திரு. தி. வல்லிபுரம், உசன் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவர் திரு. கா. செல்வராசா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆலோசகர் திரு. ஆ. ஜென்சன் றொனால்ட், உசன் இந்து மா மன்றத் தலைவர் திரு. கு. கமலதாஸ், உசன் பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி க. றெஜிதா ஆகியோர் இந்த விழாவில் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

பண்டிதர் சரவணமுத்து நினைவுப் பேருரையை உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் க. சிவப்பிரகாசம் அவர்கள் நிகழ்த்துவார்கள்.

யாழ் பல்கலைக் கழக பிரதம நூலகர் திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் க. நகுலன் அவர்கள் இந்த நிகழ்வில் மதிப்புரை நிகழ்த்துவார்.

நூலக நிர்வாகக் குழுவின் செயலாளர் செ. ஜதிகேசன் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்துவார்.

இந்தத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


Saturday, December 21, 2013

உசன் உறவுகள் 2013

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள் 2013" நிகழ்வு January 18, 2014 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. Scarborough, கனடாவில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு இடம்பெறும். பல கலை நிகழ்ச்சிகளோடு, இரவு விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி வழங்க விரும்புபவர்கள் மற்றும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும், தனி நபர்களும் ஒன்றியத்தின் செயலாளரோடு secretary@usan.ca என்ற மினஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்களின் ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி.

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Thursday, November 28, 2013

அன்பான உசன் மக்களுக்கு........

www.usan.ca என்ற இணையத் தளத்தை இயக்குபவர்கள் என்ற வகையில் அது குறித்து தவறாகக் கதைக்கப்படுகிறது என்று எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

1. எமது இணையத்தளத்தில் எல்லா மரண அறிவித்தல்களும் பிரசுரிக்கப்படுவதில்லை.
2. இதை இயக்குபவர்கள் தமது உறவினர்களின் அறிவித்தலை மட்டுமே பிரசுரிப்பார்கள்.
3. இதில் கனடா வாழ் உசன் மக்களின் செய்திகளையே பிரசுரிப்பார்கள்.
4. உசன் மக்களுக்கு எதுக்கு இணையதளம், FaceBook, Youtube?

இது போன்ற பல உண்மையற்ற விடையங்களைச் சிலர் பேசியது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. எமது ஒன்றியத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களால் இது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதால் இதைப் பிரசுரிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களுக்கு இடையில் ஒரு உறவுப்பாலமாய் அமைந்து, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உருவாக்கிய இணையதளம் www.usan.ca. இந்தத் தளத்தின் பரமரிப்புக்கள், செலவுகள் யாவும் சங்கத்தினால் மட்டுமே கவனிக்கப்படுகிறன.

இந்தத் தளத்தில் ஒரு மரண அறிவித்தலைப் பிரசுரிப்பதாக இருந்தால், கனேடிய ஊடக சட்டவிதிகளுக்கு அமைவாகக் குறித்த அறிவித்தல் தொடர்பான குடும்ப அங்கத்தவர்களின் அனுமதியும், உறுதிபடுதலும் இன்றி நாம் அதைப் பிரசுரிக்க முடியாது. உரியவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நாம் நிச்சயம் பிரசுரிப்போம், பிரசுரித்துமிருக்கிறோம்.

மரண அறிவித்தல் மட்டுமன்றி ஏனைய செய்திகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால் செய்திகளை உறுதி செய்துகொண்டு அவற்றையும் பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

இதுவரை பிரசுரிக்கப்பட்ட எந்த அறிவித்தல்களுக்கும் எவரிடம் இருந்தும் எந்த வித கட்டணமும் அறவிடவில்லை. பணம் செலவழித்து வேறு தளங்களில் பிரசுரிக்கும் போதும், இதை நாம் ஒரு இலவச சேவையாகவே உசன் மக்களுக்குச் செய்துவருகிறோம்.

எமது தளத்தை அனைத்துலக உசன் மக்களும் பயன்படுத்தமுடியும். இதைவிட எம்மால் இயக்கப்படும் பொது ஊடகங்களான Usanpeople என்ற FaceBook தளம் மற்றும் Youtube தளம் அனைத்தும் உசன் மக்களுக்காகவே பயன்படுத்தபடுகின்றன. எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகளும், அறிவித்தல்களும் உலகில் பரந்து வாழும் உசன் மக்கள் பலரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் சென்றடைகின்றன.

எனவே உங்கள் செய்திகள், நிகழ்வுகள், அறிவித்தல்களை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எம்முடனும், அனைத்துலக உசன் மக்களுடனும் பகிந்து கொள்ள முவாருங்கள். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்துத் தவறாகப் பேசுபவர்களுக்கு இதைத் தெரிவியுங்கள்.

நன்றி.

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, November 24, 2013

திருமதி. கந்திப்பிள்ளை கதிரவேலு

உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்திப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 24-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

கதிர்காமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிஸ்கந்தராசா, சாந்தநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணைமலர், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகனஸ்ரீ பிரியா, கைலாஸ், யாழினி, பகீரதி மகிந்தன், சதீஸ்குமார் கமலினி, கஸ்தூரி கபிலன், கன்னிகா காஞ்ஜீவன், கெளசிகன் மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹபிஷன், சங்கீர்த்தனன், லக்‌ஷிகன், அஸ்மிகா, பவிஷன், அனுஸ்கா, கதுரிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈச்சங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கைலாஷ் (பேரன்)
காஞ்சீவன்

தொடர்புகளுக்கு:
சிறிஸ்கந்தராசா (மகன்) — இலங்கைசெல்லிடப்பேசி: +94773694246
சாந்தநாயகி (மகள்) — இலங்கைசெல்லிடப்பேசி: +94774249242
மோகனஸ்ரீ (பேரன்) — பிரித்தானியாசெல்லிடப்பேசி: +447581266180
பகிரதி (பேத்தி) — பிரித்தானியாசெல்லிடப்பேசி: +447448856215
கனகரத்தினம் (மருமகன் - இலங்கைசெல்லிடப்பேசி: ++94774249242
கைலாஷ் (பேரன்) - New Yorkசெல்லிடப்பேசி: +13475006661
காஞ்சீவன் - இலங்கைசெல்லிடப்பேசி: +94777726516


Sunday, November 17, 2013

உசனில் சிறப்பாக நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்தின் 53 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி 16-11-2013 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை மற்றும் இரவு போட்டிகளாக உசன் கந்தசாமி கோவிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்திருக்கும்  மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .
இந்தநிகழ்வுக்கு பெருமளவான வீரர்கள் ஆதரவளர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இதை ஒழுங்கு செய்த ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கோடானகோடி நன்றிகளை தெரிவித்துகொள்கின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் விறுவிறுப்பான கடுமையான பலப்பரீட்சையின் பின்னர் வரணி இளைஞர் அணியினர் வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு உசன் கழக நிர்வாகிகள் வெற்றிகின்னத்தை வழங்கினர் .




Wednesday, November 13, 2013

நூலக உத்தியோகத்தர்கள் தெரிவாகினர் ....

உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கான வேலைவாய்ப்புக்கு
கிடைத்த விண்ணப்பங்களில் ,தெரிவுசெய்யப்பட சில விண்ணப்பதாரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்வு நிலை உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது ,
அதில் கல்வித்தகமை,திறமை ஆகியவற்றுடன் ,
குடும்பபொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ,அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ,
உசனைசேர்ந்த செல்வி .முருகேசம்பிள்ளை கௌரி அவர்கள் ,நூலக உத்தியோகத்தராகவும் ,திரு.சிவலிங்கம் அவர்கள் நிலைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  நிர்வாகசபையால் ,ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் ,


Tuesday, November 12, 2013

உசன் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுபோட்டி ....

உசனில் இயங்கிவரும் முன்பள்ளி மாணவர்களின் உடல் ,உள விருத்திக்காய் 
வருடாந்தம் நடாத்தப்படும் , முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுபோட்டியை ,இந்த வருடமும் நடாத்தும் முகமாக , இன்றைய தினம் உசனில் உள்ள முன்பள்ளி கட்டிடத்தில் , பெற்றோருக்கான  கூட்டம் 
நடைபெறவுள்ளது , கல்விநிலைய நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் , விளையாட்டுப்போட்டி தொடர்பாகவும் ,மாணவர்களின் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் , ஆராயப்படவுள்ளதால் ,
பெற்றோர் ,ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் , விளையாட்டுபோட்டியை திறம்பட நடாத்த பங்களிப்பு வழங்குமாறும் வேண்டுகிறோம் .


Sunday, November 10, 2013

வருடாந்த பரிசளிப்பு விழா

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு  விழா
உசன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது ,
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்
கடந்த வருடங்களில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி
ஊக்கம் வழங்கப்பட்டது , இந்த விழாவில் பாடாசாலை மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன , பெற்றோர் ,பழைய,மாணவர்கள் ,நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட மக்களும் இந்த பரிசளிப்பு விழாவில்  கலந்து சிறப்பித்திருந்தனர் ,உசன் பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள்  இந்த நிகழ்வுக்கு அதிக ஊக்கம் வழங்கியிருந்தனர் .
                                    













Saturday, November 2, 2013

உசன் மண்ணில் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 53 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் பல சேவைகளை உசன் மண்ணில் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வகையிலே அண்மையில் உயிர் காப்புச் சேவையான இரத்த தான நிகழ்வொன்றை நடாத்தி சாதனை செய்துள்ளதைப் பத்திரிகைகள் உட்படப் பலரும் பாராட்டியுள்ளனர்.

நடைபெற இருக்கும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்களை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் கோரியுள்ளது. ஆர்வமுள்ள அணிகள் தங்களது விண்ணப்பங்களை 06-11-2013 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0774129348 அல்லது 0776534278 என்ற தொலை பேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளாலாம்.

இந்தக் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


Thursday, October 24, 2013

திருமண வாழ்த்துக்கள்


உசனைச்சேர்ந்த திரு திருமதி அருட்பிரகாசம்  பூவதி தம்பதிகளின் புதல்வி செல்வி கஜானி அவர்களுக்கும் ,செல்வன் யசோதன் அவர்களுக்கும்
உசன் முருகன் அருளால் ,உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது ,
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு உசனில் நடைபெற்ற மிகப்பெரும் திருமண விழாவாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ,இலங்கையில் பல பகுதிகளிலும் வாழும் உசன் மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் , இதனால் மீண்டும் உசன் மக்கள் ஒன்றுகூடிய சிறப்பு நாளாக இது பதிவாகியிருந்தது .
திருமண பந்தத்தில் இணைத்து கொண்ட திரு திருமதி யசோதன் கஜானி தம்பதியினருக்கு ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு. புதிதாய் எமது உசனுக்குள் புகுந்த மருமகனை அன்போடு வரவேற்கிறோம் . உங்கள் திறமைகளின் ஒரு பகுதியை எமது ஊரின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த  வேண்டுகிறோம் .

பல்லாண்டு வாழ்க
அனைத்துலக உசன் மக்கள்   


Saturday, October 19, 2013

உசனில் உடனடி வேலைவாய்ப்பு .....விண்ணப்ப இறுதி திகதி Oct 27

உசனில் உருவாகிவரும் "பண்டிதர் சரவணமுத்து " பொது நூலகத்தின் வேலைகள் பூர்த்தியாகி வரும் நிலையில் . மிகவிரைவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்
பின்வரும்  பணிகளுக்கான . வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்  உள்ளது ,
எனவே தகுதியானவர்கள் உங்கள் சுய விபர கோவையுடன் உங்கள் விண்ணப்பத்தை , கீழ் வரும் உத்தியோகத்திரடம் சமர்ப்பிக்கலாம்
 
 தகுதியான அடிப்படை சம்பளம் மற்றும் இலங்கை நூலக கட்டுப்பட்டு சபையிடம் பயிட்சியும் வழங்கப்படும் 
பதவி நிலை 1.
                     நூலக அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்   (பெண் )

    பதவி நிலை 2.
                   நூலக அலுவலக நிர்வாக உதவி உத்தியோகத்தர்(பெண்/ஆண்  )
                        (தற்காலிகம் /பகுதிநேரம்)

    பதவி நிலை 3.
                      நூல்நிலைய பராமரிப்பாளர்/இரவு காவல்  (ஆண்)

தகுதி :   * க.போ,த  சா/தரம்  நிறைவு செய்திருக்க வேண்டும்
                * அடிப்படை ஆங்கில அறிவு
                * அடிப்படை கணனி  அறிவு
                * சேவை மனப்பான்மை/அர்ப்பணிப்பு உடன் பணிபுரியும் தன்மை
                * உசனில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
                * பயிற்சி நெறியை இலகுவாக கற்றுக்கொள்ளும் திறமை
                * நிலையத்தின் நிர்வாகத்தை முழுமையுடன் கவனிக்கும் திறமை
பதவிநிலை 3.
               * காணி கட்டிடத்தை பராமரித்த அனுபவம்
               * இரவு காவலுடன் நிலைய சுற்றாடல் துப்பரவு
               * இரவு/பகல்  முழுமையாக பாதுகாக்கும் பொறுப்பு
               * நிர்வாகசபைக்கு கட்டுப்பட்டு இயங்க கூடிய மனப்பாங்கு
               * சுயமாக அடிப்படை கட்டிட திருத்த வேலைகள் தெரிந்திருப்பது

உங்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 27 ம் திகதிக்கு முன்னர் கையளிக்கவும் மேலதிக விபரங்களும் தகவல்களும் உசன் நிவாகசபையிடம் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்கள் விண்ணப்பங்களை .
தலைவர் :திருமதி மீரா தேவரஞ்சன்
                     திரு.ஜதிகேசன்
                    திரு.காஞ்சீபன்
                     திரு.சிவானந்தன்   ஆகியோரிடம் கையளிக்கலாம் .
**** திறமை ,அனுபவம் , மனப்பாங்கு நன்னடத்தை , ஆகியவற்றின் அடிப்படையில்  நேர்முகதேர்வு மூலமே  பணியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர் ******
    


Wednesday, October 16, 2013

உசன் இளையோரின் இரத்ததானம் ......

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத்தின் 53வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட மாபெரும் உயிர்காப்பு பணியான இரத்த தான முகாமில் பங்கு கொண்டு, "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்கத் தமது உதிரத்தை உவந்தளித்த உத்தமர்களுக்கு எமது கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் காலமாக உசனில் வாழும் இளையவர்கள் ஊருக்கும், நாட்டுக்கும் இவ்வாறு பணி செய்து வருவது யாவரும் அறிந்ததே. தொடர்ந்து வரும் சந்ததியினரும் அதைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. உங்கள் பணிக்கு உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் - கனடா தலை வணங்குகிறது. தொடரட்டும் உங்கள் பொதுப்பணி.

இதை முன்னின்று நடத்திய ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு எமது நன்றிகள்.
முருகேசு முரளி 

சுப்ரமணியம் சுபேஷ்

செயலாளர் ; செல்லத்துரை ஜதிகேசன்

Add caption

பாலசிங்கம் காஞ்சீபன்

பகீரதன் 

ரூபன் 




Wednesday, October 9, 2013

உசன் "விஜய" சகோதர்கள் சாதனை

உசனில் பிறந்து, உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் படித்து, உசனில் பல மாணவர்களுக்குப் படிப்பித்த, இரு ஆசிரியர்கள் இலங்கையில் சிறந்த ஆசிரியருக்கான சிறப்பு அதிஉயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
உசனில் "விஜய" குடும்பத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஒப்பிலாமணி அவர்களின் புதல்வர்களான திரு. ஒ.விஜயரத்தினம் மற்றும் திரு. ஒ.விஜயதாசன் ஆகியோர், யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் சிறந்த ஆசிரியர்களுக்கான இலங்கையில் அதி உயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினை 05/10/2013 அன்று பெற்றுக்கொண்டனர். "விஜய" சகோதரர்கள் ஒரே பாடசாலையில் ஒரே விருதைப் பெற்று சாதனை படைத்தனர். இவர்களின் திறமையால் இவர்களைப் பெற்று வளர்த்த கிராமமும், கல்வியூட்டிய உசன் பாடசாலையும் பெருமை கொள்கிறது.

இவர்களின் தந்தையார் திரு. ஒப்பிலாமணி அவர்கள் உசனில் பல மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்த ஆசிரியர் என்பதுடன் "விஜய" சகோதரர்கள் பலரும் ஆசிரிய பணியில் இருப்பது மட்டுமன்றி கடல் கடந்தும் இவர்களின் ஆசிரியப் பணியாக திருமதி. வியஜகுமாரி அவர்கள் கனடாவில் தமிழ் மொழிக்கல்வியை வளர்க்க கனேடிய பாடசாலை கட்டமைப்பில் தமிழ் ஆசிரியாராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் இளைய சகோதரன் வியஜரூபன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை உறுப்பினராக இருந்து அதன் முயற்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை சேர்த்த உசன் "விஜய" சகோதரர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பணி உசன் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். உங்கள் பணி தொடரவும், இன்னும் பல விருதுகள் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறோம்.


Thursday, October 3, 2013

உசனில் உருவாக்கி வரும் நூலகம் ......


அனைத்துலக உசன் மக்களையும் இணைத்து யாழ் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் உள்ள சிறந்த கிராமமாக உசனை மாற்றும் முயற்சியில் இறங்கிய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் பிரதான பணியான நூலகம அமைக்கும் முயற்சியில் ,
கனடா ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் ,உசன் நூலக ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திருமதி ,சி.சாந்தினி நவரத்தினம் அவர்கள் நேரடியாக உசனுக்கு சென்று , உசன் நிர்வாகசபை உறுப்பினர்களுடன்
மேலதிக நடவடிக்கை குறித்து கந்துரையாடி  நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டு வந்துள்ளார் .

இராணுவ பாவனையிலிருந்த நூலகத்துக்குரிய வீட்டை உசன் நிர்வாக உறுப்பினர்கள் மீள் திருத்த வேலை செய்து வருகின்றனர் ,
நூலக கட்டிடத்தின் உள்ளக உள்ளக தோற்றமே இது .......





Thursday, September 26, 2013

அரங்கேறியது உசனில் ஊற்றெடுத்த சங்கீத சாரல் .....

 உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய  செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் September மாதம் 21 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு, சனிக்கிழமை அன்று Toronto, கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .பிரபல்யம் வாய்ந்த  Armenian Youth Centre கலையரங்கில் சங்கீத அரங்கேற்றம் ஆரம்பமானபொது 
அரங்கு நிறைந்த ரசிகர்கர்களும் சங்கீத வித்துவான்கள், கலை உலக வித்துவான்கள் , மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களின் முன்னிலையில் 
செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் அனைவரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது ....
உசனைச்சேர்ந்த இளம் மாணவி புலம்பெயர் தேசத்தில் முறைப்படி சங்கீதம் பயின்று முதல் முறை அரங்கேற்றம் செய்யும் வரை சென்ற பெருமை செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் அவர்களையே சாரும் ... 
 இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் இசை உணர்வும் அரங்கை பூரிக்க வைத்தது .இவரின் தாயார் உசனில் உருவான சங்கீத மேதை ரஜனி நவரட்ணம் ஆவார் தன்னை போன்றே தனது மகளையும் புலம் பெயர் தேசத்தில் உருவாக்கி உசன் மண்ணுக்கு பெருமை சேர்த்தமைக்கு ,திரு,திருமதி .மதீஸ்வரன் ரஜனிஅவர்களுக்கு உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 

செல்வி பிரதிஷ்னி அவர்கள் ஓம் ஸ்ரீ சக்ர கான சபா அதிபர், சங்கீத பூஷணம், ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களிடம் பல வருடங்களாக முறையாக சங்கீதம் கற்று வருகின்றார் செல்வி பிரதிஷ்னி. சங்கீதம் கற்று வரும் காலங்களில் பல சிறப்பு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நிகழ்த்தும் "உசன் உறவுகள்" நிகழ்வில் இவரின் சங்கீதத் திறமையைக் கண்டு பலரும் பாராட்டினர். Toronto இல் உள்ள ஆலயங்களிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்வி பிரதிஷ்னி அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் ,தொடர்ந்து சங்கீத பணி தொடர உசன் முருகனையும் வேண்டி நிக்கிறது .....
உசன் இளம் தலைமுறை முன்னேற்றம் கண்டு நாம் பெருமை கொள்கிறோம் 


Monday, September 16, 2013

கனடாவில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைத்துலக உசன் மக்களையும் அரவணைத்து உசனில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஒன்றான உசனில் பொது நூலகம் அமைக்கும் பணியின் இறுதிக்கட்ட முடிவுகள் குறித்த கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று September மாதம் 15 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு அன்று கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் நடைபெற்றது.





இந்தச் சந்திப்பில் உசன் அபிவிருத்திக்கு முன்னின்று பங்களிப்பு வழங்கும் உசன் உறவுகள் கலந்திருந்தனர் . பண்டிதர் சரவணமுத்து நூலகத்திற்குத் தமது வீட்டை உவந்தளித்த திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா தம்பதிகள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் முக்கியமான விடையங்களாக:
  • உசனில் உருவாக்கப்பட்ட அமைப்பைச் சட்டப்படி பதிவு செய்தல்
  • நீண்ட காலம் நூலகத்தை நிர்வகிக்கத் தேவையான நிதி விடயம்
  • உசன் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்டக் கூடிய திட்டங்கள்
  • உசன் கிராமத்தின் பொது விடையங்கள்
போன்றவை தொடர்பான கருத்து பரிமாறல் இடம்பெற்றது.

பொது நூலகத்தை விரைவில் முழு நூலகமாக அமைக்கத் தமது முழுப் பங்களிப்பையும் திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா அவர்கள் வழங்கியதுடன், அடிப்படைச் செலவுகளுக்காக $1000.00 (SL Rs.125000.00) நிதியுதவியையும் வழங்கியிருந்தனர்.

இந்த விசேட சந்திப்பில் எமது நிர்வாகசபை உறுப்பினர்களுடன் உசன் அபிவிருத்திக்கு எம்மோடு முன்னின்று உதவிகள் வழங்கிவரும் திரு. வெற்றிவேலு பிரபானந்தன், திரு. நல்லதம்பி கனகலிங்கம் (ராசா) ஆகியோருடன் பின்னர் Dr. இந்திரன் ஆசிர்வாதம் அவர்களும் இணைந்திருந்து பல ஆலோசனைகளையும் வழங்கினர்.

நூலகம் அமைக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் மிக விரைவில் உசனில் பொது நூலகம் முழுமையாக அமையவுள்ளது. இதற்கு அனைத்துலக உசன் மக்களின் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம்.