அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, October 28, 2014

சுவிஸ் Luzern நகரில் "பரததர்சனம்"

சுவிட்சர்லாந்து நாட்டில் Luzern நகரில் வசித்துவரும் தமிழ் மாணவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாகப் பரதநாட்டியக் கலையைக் கற்பித்து, சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பல தமிழ் கலை நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் "பரததர்சன" நடனக் கல்லூரியின் 10 வது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் முகமாக, பரததர்சன நடனாலய மாணவர்களும், ஆசிரியரும், பெற்றோரும் இணைந்து வழங்கும் "பரததர்சனம்" பரதநாட்டிய நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ளது.


Luzern நகரில் அமைந்துள்ள Pfarrei St, Karli Spital Strasse-91, 6004 Luzern இல் பிற்பகல் 1 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். "பரததர்சன" நடனக் கல்லூரியின் அதிபர் திருமதி.காயத்திரி திஷாந்தன் அவர்களின் வழிகாட்டலில் பரத நாட்டிய திறமையால் "கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களின் பாராட்டைப் பெற்ற மாணவிகள் இணைந்து வழங்கும் பரததர்சனம் நிகழ்வு பரதநாட்டிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நடனத்திறமையை வெளிக்கொணரும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து மாணவர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு: 0762957116  /  0763654821


Sunday, October 26, 2014

மரண அறிவித்தல் - வீரசிங்கம் குழந்தைவேலு



உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை அவர்களின் மருமகன் மட்டுவிலைச் சேர்ந்த வீரசிங்கம் குழந்தைவேலு (Ayurvedic Physician) அவர்கள் சனிக்கிழமை, October 25, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் காலமானார்.

அன்னார் ஜெயலக்ஷ்மியின் அன்புக் கணவரும்,

வியஜலஷ்மி (Land Officer, Government Secretariat, Jaffna), கமலாம்பிகை (Former Agriculture Instructor), பத்மநாதன் (Former Agriculture Assistant, Sugar Factory, Amparai), பத்மாவதி (Administrative Officer, Government Secretariat, Jaffna), கமலநாதன் (Ayurvedic Physician) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

சந்திரதேவா (Business Owner), மாலினி (Medical Recording Officer) ஆகியோரின் மதிப்புக்குரிய மாமானாரும்,

ரவீந்திரகுமார், கஜனி, பத்மகுமார், சாகித்யன், குருஷோத்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை, October 26, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் நடைபெற்று பூதவுடல் காளி கோவிலடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சாந்தினி சிவானந்தன் (மருமகள், கனடா) - +1-905-554-2014


Monday, October 13, 2014

சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

இறை பதம் எய்திய சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகளை October 15, 2014 புதன் கிழமை அன்று Toronto, Canada நேரப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை கீழுள்ள இணைப்பில் நேரடியாகக் காணலாம்.

Click here

Or browse to the link below:
http://m.ustream.tv/channel/chapel-ridge-funeral-home


Sunday, October 12, 2014

மரண அறிவித்தல் - திரு. சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை

திருத்தப்பட்ட செய்தி

இலங்கை தென்மராட்சி உசனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு தற்போது Scarborough, Ontario, கனடாவில் வசித்து வந்தவருமான சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை (ஆச்சியாவளவு சிதம்பரப்பிள்ளை) அவர்கள் இன்று October 12, 2014, ஞாயிற்றுக் கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நாகமுத்து (கச்சாய்), கந்தையா (உசன்), தம்பையா (உசன், வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜேஸ்வரி (ராணி, France), ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark), ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, Canada), யோகநாதன் (சின்னாம்பி, Germany), தயாபரன் (தயா, Canada), உதயகுமாரன் (உதயன், London), யோகேஸ்வரி (யோகேஸ், France), தயாளினி (தயாளி, Canada), வரதகுமாரன் (வரதன், Canada) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

கனகரத்தினம் France (சரசாலை), கந்தசாமி Denmark (எருவன்), கமலாம்பிகை Canada (நீர்வேலி), பீட்ரா Germany, புஸ்பராணி Canada (தேவி, குப்பிழான்), சத்தியா London (காரைநகர்), தனேந்திரன் (இலங்கை), உதயகுமார் Canada (கோவிலாகண்டி), உஷாம்பிகை Canada (வல்வெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும், யவநீதன் (France), யதுகுலன் (London), யசோதரன் (France), துவாரகன் (Denmark), டெனிஷா (Denmark), துளசிகா (Denmark), சிந்துஜன் (Canada), சிந்துஜா (Canada), சரணியா (Canada), யான் (Germany), யானா (Germany), யவனா (Canada), யசிதா (Canada), யனனன் (Canada), ஆர்த்தி (London), மயூரா (London), வினுஜா (இலங்கை), யனோஷன் (இலங்கை), கிரிஷாலினி (இலங்கை), சுலக்ஷன் (France), கஜனன் (Canada), கஜிதா (Canada), வர்சா (Canada), ஆதி (Canada) ஆகியோரின் அன்புப் பேரனும், ஹரிஷா (Denmark) அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் 14-10-2014 செவ்வாய் கிழமை பிற்பகல் 5 மணிமுதல் இரவு 9 மணி வரை 8911 Woobine Avenue Markham, Ontario L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeஇல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மீன்டும் மறுநாள் 15-10-2014 அன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை அதே மண்டபத்தில் ஈமக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் 1591 Elgin Mills Road East Richmond Hill, Ontario L4S 1M9 இல் உள்ள Elgin Mills Cemetaryக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நண்பகல் 12மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.
இராஜேஸ்வரி (ராணி, France): +33-9502-42407
ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark)
ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, கனடா): +1-416-321-6158
யோகநாதன் (சின்னாம்பி, Germany): +49-4282-3733
தயாபரன் (தயா, கனடா): +1-647-889-2944
உதயகுமாரன் (உதயன், UK): +44-208-5182007
தயாளினி (தயாளி, கனடா): +1-647-567-7959
வரதகுமாரன் (வரதன், கனடா): +1-647-567-7959

அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, October 2, 2014

உசனில் இடம்பெற்ற வாணி விழாக்கள்

முப்பெருந்தேவிகளையும் சிறப்பாக வழிபடும் நேரமிது. கல்வியில் சிறந்து விளங்க வேண்டிக் கலைமகளுக்கு விழாவெடுத்து வணங்குவோம். இம்முறை உசனில் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்திலும், ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்திலும் வாணி விழாக்கள் சிறப்பாக இடம்பெற்றன. இந்த விழாக்களில் இருந்து சில புகைப் படங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில்
ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்தில்