அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, June 28, 2013

மரண அறிவித்தல்

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சரவணமுத்து அவர்கள் 28.06.2013, வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி - சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நவமணி, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தலக்குமி, ஸ்ரீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி (இலங்கை), தனலக்குமி (ஆசிரியர் - விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்), பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன் (இத்தாலி), முருகானந்தன் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தாயும்,

செல்லத்துரை, காலஞ்சென்ற ஞானதேவி, சந்திராதேவி, சுந்தரலிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர்), யோகராசா (ஆசிரியர் - இடைக்குறிச்சி சுப்பிரமணியம் வித்தியாலயம்), சிவசோதி (கனடா), லதா (இத்தாலி), அனுசா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜசிதலா, ராஜாராம் (அவுஸ்திரேலியா), யதிகேசன் (IDM, சாவகச்சேரி, ராஜீவ், சுஜிதா (இத்தாலி), கஜிதா, காண்டீபன், ரஜீவனா - கஜரூபன் (பட்டதாரி பயிலுனர்கள்), தினேஸ் (HNDE மட்டக்குளி), விதுசன், வேணுசன், வைஸ்ணவி, மயூரன் (கனடா), மீனுஜா (கனடா), தணிகேசன் (அவுஸ்திரேலியா), தாரணி (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுமிதா, (அவுஸ்திரேலியா), கரிஸ்ராம் (அவுஸ்திரேலியா), அக்சிகா (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.06.32013, ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று, பி. ப. 1 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பத்மகாந்தன்(இலங்கை)+94774862626
பத்மகாந்தன்(கனடா)+19058030204
முருகானந்தன்+94778155501
ஸ்ரீகாந்தன்+94774289740
ஜீவகாந்தன்+393471941009


Wednesday, June 26, 2013

உசனில் உதயமாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்"


கடந்த வருட காலமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும், உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் மற்றும் உசன் இளையோரும், மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக உசனில் உருவாகியது "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்".
பல தடைகளை கடந்து உண்மையான உசன் உணர்வாளர்களின் முயற்சியில், உசன் இளையவர்களின் அர்ப்பணிப்பில் உருவாக்கம் பெற்று இன்று வணக்கத்துக்குரிய சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் ஆசிர்வாத பூசையைத் தொடர்ந்து, நூலக நிர்வாகசபையின் புதிய தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் அவர்களும், முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற, உசன் வாழ் எதிர்கால சந்ததி மேல் பற்று கொண்ட மக்களும், உசன் பாடசாலை மாணவர்களும் கலந்திருக்க "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


அடிப்படை வசதியுடன் தினசரிப்பத்திரிகை உடன் மட்டுமே ஆரம்பிக்கப்பட இந்த நூலகத்துக்கு முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் திரு. ஸ்ரீகாந்தன், உசன் பாடசாலை முன்னாள் அதிபர் திரு. பேரம்பலம் அவர்களின் மகள் திருமதி துஸ்யந்தி மிகுந்தன் ஆகியோர் மட்டுமே பத்திரிகை நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.
இருப்பினும் இதனை முழுமையான நூலகமாக மாற்ற எமக்கு இன்னும் ஆதரவும், உதவிகளும் தேவைபடுகிறது. அனைத்துலகிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட உசன் வாழ் மக்கள் தயவு செய்து உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நூலகத்துக்கு தினசரி பத்திரிகை, வாராந்த பத்திரிகை, ஆங்கில பத்திரிகை, மற்றும் வாராந்த, மாதாந்த சஞ்சிகைகள், அதைவிட ஒரு அலுவலக பணியாளர் வேதனம், ஒரு நிர்வாக பாதுகாவலர் வேதனம் ஆகியற்றுக்கான உதவிகள் தேவைபப்டுகிறன. உசன் கல்வியறிவை, உங்கள் குடும்பமாக நினைத்து உதவி புரியுமாறு உசன் வாழ் மக்கள் சார்பாக வேண்டுகிறோம். எம் உசன் ஊர் மீது பற்றுள்ளவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடன்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செயலாளர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன்
+1 647 448 7434


Sunday, June 23, 2013

உசன் நூலக பணிக்கு அவசர பண உதவி தேவை.....


அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே!

கடந்த 3 வருட காலமாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உசன் கிராமத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தது. இதற்கு உசன் மேல் பற்றுள்ள பலரும் கை கொடுத்தனர். அத்தோடு பல நிறுவனங்களும் உசன் அபிவிருத்திக்கு உதவத் தயாராக இருந்தன. இருப்பினும் சர்வதேச பொது நிறுவனங்களின் வேண்டுகோள் என்னவெனில், ஒரு திட்டத்தை செயற்படுத்தி காட்டினால் அது குறித்து அவர்கள் தமது உதவியை எமது உசன் மக்களுக்கு வழங்க முடியும் என்பதே. இதனை எமக்கு உதவி புரியும் சில அன்பர்களுக்கு தெரிவித்தோம்.
அதன் அடிப்படையில் வந்ததே "உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்". இப்பொழுது பல இடர்களுக்கு மத்தியில் இராணுவக் கட்டுபாட்டில் இருந்த அந்த வீட்டை மீட்டு சிரமதானம் செய்து இயங்குவற்குத் தயார் நிலையில் உள்ளது. எமது திட்டப்படி இந்த நூலகத்தை இயக்க பண உதவி தேவைப்படுகிறது. கனடா வாழ் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு கட்டிட புனரமைப்பு முடிவடைந்த நிலையில் தொடர்ந்தும் கனடா வாழ் மக்களே உசன் புனரமைப்பில் பங்களிப்பு செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே! உங்களால் முடிந்த சிறிய உதவியையேனும் எமக்கு வழங்கினால் எமது பணியைத் தொடர முடியம். இல்லையேல் பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி இடை நடுவில் நின்று போகும் அவலம் ஏற்படும். எனவே இந்த அவசர தேவைக்கு உங்களால் முடிந்த உதவியை மிக விரைவாகச் செய்யுமாறு அன்போடு வேண்டி நிற்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா. ஒன்றியத்தின் செயலாளர் பாஸ்கரன் அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இந்த நற்பணியை நீங்கள் ஆற்ற முடியும்.

உங்களின் பங்களிப்பு இன்றி ஒன்றியத்தால் எதுவும் செய்ய முடியாது. இதுவரை செய்த எல்லா முயற்சிகளும் பயனற்றுப்போக விட்டுவிடாதீர்கள். அது மட்டுமன்றி நாம் சர்வதேச நிறுவனங்களுடன் பேசி கேட்ட உதவிகளும் கிடைக்காமல் போக இடமளியாதீர்கள். எமக்கு பல வழிகளில் அனைத்துலக நாடுகளில் இருந்து பல உசன் அன்பர்களின் முயற்சியால் அந்த நாட்டு அரசாங்க தரப்பில் இருந்தும் உசன் அபிவிருத்திக்கு உதவிகள் கிடைக்கவிருந்தன. ஆனால் நாம் முதலில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு செயற்திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டும். அதற்கு இந்த "பண்டிதர் சரவணமுத்து பொது நூலக" திட்டத்தைச் செயற்பபடுத்திக் காட்டுவோம், வாருங்கள்.

நோர்வே வாழ் திரு. அம்பலவாணர் ஜெயதேவன் அவர்கள் உசனில் உருவாக்க முயற்சித்த முதியோர் நலன் காப்பகம் உசன் மக்களின் பங்களிப்பின்மை காரணமாக இடையில் நின்றுபோயுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தவிர அவரின் பல இலட்சம் பணமும் தேக்கமான நிலையில் உள்ளது. இந்த நிதி மிக விரைவில் கொடிகாமத்துக்கு சேரவுள்ளது என்றும் அறிகிறோம். இந்த நிலை தொடர இடமளியாதீர்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு:
செயலாளர் பாஸ்கரன்: +1 647 448 7434


Wednesday, June 19, 2013

இரங்கல் மடல்

திரு. குகதாஸ் கேதீஸ்வரதாஸ் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் வாழ் உசன் மக்கள் சார்பாக Dubeni Jegasoothy அனுப்பியுள்ள இரங்கல் மடலை இங்கே வெளியிடுகிறோம்.
உசன் மக்கள் ஐக்கிய ஒன்றியம் - கனடா


Sunday, June 16, 2013

மரண அறிவித்தல்.

உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாஸ் கேதீஸ்வரதாஸ் (ஈசா) அவர்கள் காலமானார்.

அன்னார் குகதாஸ் - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கலாவதியின் பாசமிகு கணவனும், ஹம்ஷிகா, விபூஷணா, பிரியங்கா ஆகியோரின் ஆசை அப்பாவும்,
கமலதாஸ், சிவதாஸ், விமலதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் June 17, 2013 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சிவானந்தன் +1-905-554-2014


Wednesday, June 12, 2013

"உசன் பண்டிதர் பொதுநூலக" பணி ஆரம்பம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,உசன் எதிர்கால சந்ததியின்  அறிவியல் நலனுக்காய் முன்னெடுத்துவரும் பொதுநூலகம் அமைக்கும் புனரமைப்பு  பணி ஆரம்பமாகியுள்ளது .
இராணுவ பாவனையில் இருந்த பண்டிதர் சரவணமுத்து அவர்களின் வீடு
சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களால் பெற்றுகொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து .
இராணுவ நிர்வாகத்தின் சில வேண்டுகோள்களும் முடிவடைந்த நிலையில் .
முழுமையான  "உசன் பண்டிதர் பொதுநூலக நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நேற்றைய தினம் கட்டிடத்தை புனரமைக்கும் பணி எமது நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது .

 பொது நூலக நிர்வாகசபை , மற்றும் உசன் இளையவர்களினால் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்
திரு .பத்மன் சரவணமுத்து அவர்கள் நேரடியாக உசனில் நின்று பணியை கண்காணித்து ஒழுங்கமைத்து வருகிறார்.
எமது சங்கத்திலிருந்த மிகசிறிய நிதி தொகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் புத்தகங்கள் தளபாடங்கள் பத்திரிக்கை ,சஞ்சிகை ,நாவல் போன்றவற்றுக்கான ஆதரவு
தேவைப்படுகிறது .
அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களே ...
 இந்த அறிவியல் பணிக்கு உங்கள் பங்களிப்பை நாடி நிக்கிறோம்.
உசனுக்கு கிடைக்கபெற்ற இந்த நல்ல உதவியை சரியான முறையில் நெறிப்படுத்த அனைவரின் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.

உங்களின் ஒவ்வொரு சிறிய உதவியும் உசன் வாழ் எதிகால சந்ததிக்கு பெரும் விருட்சமாக அமையும்.

தொடர்புகளுக்கு ; 94777174446,0776108420,94776578032
             கனடா -பாஸ்கரன் :0016474487434

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்






Sunday, June 9, 2013

உசனைச் சென்றடைந்த அவுஸ்திரேலிய உதவி

உசன் இராமநாதன் மகாவித்தியாலய நிர்வாகம்  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவிடம் விடுத்த உதவி குறித்து எமது தளத்தில் பிரசுரித்து உதவி கோரினோம்.
அனைத்துலக உசன் மக்களும் மௌனமாய் இருந்த நேரம்
 அவுஸ்திரேலியா வாழ் உசன் பாடசாலை பழைய மாணவர்கள்
சிலர் ஒன்றிணைந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மூலம் பாடசாலைக்கு அவசரமாகத்
தேவையான Photocopy இயந்திரத்தை வாங்கத் தேவையான உதவியை வழங்க முன்வந்தனர் .
பாடசாலை அதிபர், உசன் பண்டிதர் சரவணமுத்து பொதுநூலக நிர்வாகசபை மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்கள் 
 ஒன்றிணைந்து அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட Photocopy இயந்திரம் உசன் பாடசாலையைச் சென்றடைந்தது.
இந்த உதவி நடவடிக்கை சிறப்பாக நடைபெற நிதியுதவி  புரிந்த அவுஸ்திரேலியா வாழ் உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களான
திரு. நந்தகுமார் கிருஷ்ணமூர்த்தி 
திரு. முகுந்தன் கிருஷ்ணமூர்த்தி 
திரு. ஜெயந்தன் கிருஷ்ணமூர்த்தி 
திரு. சுவேந்தி சிவபாதம் 
திரு. மனோஜ் நடராஜா
திரு. புருசோத்தமன் ஈஸ்வரபாதம் 
திரு. ஜோசெப் சூசைதாசன் 
திரு. உமா நாகேந்திரம் (வடக்குமிருசுவில்)
திரு. சிவதாஸ் மாணிக்கம் 
திரு. சங்கர் தனபாலசிங்கம் 
ஆகியோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்பாகவும், உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக நிர்வாகசபை சார்பாகவும்,உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்கள் சார்பாகவும்   எமது மனமார்ந்த நன்றிகள்.
உசன் பாடசாலையின் தேவையினை அறிந்து எமக்கு தெரியப்படுத்தி இறுதிவரை நிறைவேற்ற பணியாற்றிய திரு. பிரபா அரியரத்தினம் அவர்களுக்கும் நன்றிகள். 


அதுமட்டுமன்றி இந்த நிதிசேகரிப்பை முழுமையாகப் பொறுப்பெடுத்து வெற்றிகரமாக நிறைவேற்ற எம்முடன் உழைத்த திரு. ஜெயந்தன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எமது சிறப்பான பாராட்டுக்களும் நன்றிகளும்.
நாம் மேலும் தொடர இருக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து பங்களிப்பு வழங்க முன்வந்துள்ள அவுஸ்திரேலியா வாழ் அனைத்து உசன் உறவுகளுக்கும் மீண்டும் எமது நன்றிகள். 


"உங்கள் ஒத்துழைப்பே உசனுக்கு வலுச்சேர்க்கும்"

    நன்றியுடன் 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா 



Wednesday, June 5, 2013

உங்களோடு நாங்கள்...........



மதிப்புக்குரிய உசன் மக்களே!

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பது குறித்தும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்தும் முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டிருப்பது, ஒன்றியத்தின் செயலாளர் என்ற வகையில் எனது கவனத்துக்குக் கொண்டுரப்பட்டுள்ளது. பொதுத் தளமொன்றில் எழுதுவதற்கு முன்னால் எழுதப்படும் விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டு விபரம் சேகரிக்க வேண்டும் என்ற ஊடக தர்மம் கூடத் தெரியாத, முகத்தை மறைக்கும் ஒருவரின் கருத்துக்குப் பதில் எழுதும் அவசியம் ஒன்றியத்திற்கு இல்லை. ஆனால் இந்த ஆக்கம் மக்களைக் குழப்பும் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதுபோல் கருதப்படுவதால் மக்களுக்கு விளக்கமளிக்கும் கடமை ஒன்றியத்துக்கு இருக்கிறது.

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பதற்கான மூலகாரணம் நிதிப் பற்றாக்குறையே தவிர நிர்வாகத்தினதோ அன்றி ஒன்றியத்தினதோ "கையாலாகத்தனம்" அல்ல. நிதி சேகரிப்பு முயற்சிகள் நடந்துகொடிருக்கின்றன. நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக செயற்பட முடியவில்லை என்பதில் எங்களுக்கும் கவலைதான். இந்த முயற்சிக்கு நிதி தந்து உதவக்கூடியவர்களை ஒன்றியத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

குருக்கள் வீட்டினை மீட்டுத்தரவில்லையென ஒன்றியத்தினர் முன்னர் கூறியதாக எழுதப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது. ஒன்றியத்திற்கும் மதிப்புக்குரிய குருக்கள் அவர்களுக்குமிடையே இருக்கும் நல்லுறவைக் குலைக்கும் நோக்கோடு இப்படி எழுதப்பட்டுள்ளது என்றே இதை நாம் பார்க்கிறோம்.

தெரிவு செய்யப்பட்ட போசகர்களும், நிர்வாகமும் என்ன செய்கிறது என்று கேட்கப்படிருக்கிறது. அவர்கள் தங்கள் பங்கைச் செவனே செய்துகொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் சொற்ப நேரத்திலும் ஊரின் வளர்ச்சியில் அக்கறையோடு ஈடுபடும் இவர்களுக்கு ஒன்றியம் இந்த நேரத்தில் பகிரங்கமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறது. ஒன்றியமும் மௌனமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலக முயற்சியில் அக்கறையுள்ள அனேகமாநோருக்கும் ஒன்றியம் என்ன செய்கிறது என்று நன்றாகவே தெரியும். ஒன்றியத்துக்கும், அதனைச் சார்ந்தோருக்கும் அவதூறு விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை.

வெற்றி அஜந்தன் பணம் அனுப்பியிருப்பதாக எழுதப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது. அது அவரின் தனிப்பட்ட பணம் அல்ல. மதிப்புக்குரிய வெற்றிவேலு அஜந்தன் ஒன்றியத்தின் பொருளாளர் என்ற முறையிலேயே அந்தப் பணத்தை அனுப்பிவைத்தார். அஜந்தனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரை இந்த முயற்சிகளில் இருந்து விலகச் செய்து ஊரின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதாகவே நாம் கருதுகிறோம். இதனை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் அந்தச் சூரியன் மறைந்து போவதில்லை.

இந்த ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்களால் தெரிவு செய்யப்பட்டு கனடா அரசில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. வருடா வருடம் இந்த ஒன்றியத்தின் வரவு செலவு விபரங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்றியத்தின் நிர்வாக சபையே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றது. இந்த நிலையில் அஜந்தன் அடுத்தவர்களின் மூளையைச் சலவை செய்து, பணம் தேவை என்றவுடன் அனுப்பி வைக்கிறார் என்று எழுதியிருப்பது மிகவும் தவறான ஒரு விடயம். இது ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பவர்களை மூளை இல்லாதவர்கள் என்று கூறிக் கேவலப்படுத்தும் ஒரு நடவடிக்கை.

உசன் சரவணமுத்து நூலக நிர்வாகத்தினர் மற்றும் போசகர்களுடன் தொடர்பு கொண்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்ற பொருள்பட எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் இந்த முடிவுக்கு வர என்ன காரணம் என்று எமக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது அன்பான உசன் மக்களே,
நாம் எம்மால் முடிந்தவரை உங்களின் ஒத்துழைப்போடு உசனின் வளர்ச்சிக்கு முயற்சிப்போம். நீங்களும் இப்படியான குழப்பவாதிகளுக்கு இடமளியாமல், தகவல்களைச் சரியான இடங்களில் இருந்து பெற்று, உசனின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

உங்கள் உண்மையுள்ள,
சுப்பிரமணியம் பாஸ்கரன்
செயலாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா