அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, April 24, 2017

மிருசுவில் பங்கின் மூத்தகுரு அருட்பணி குணசீலன் அவர்களுக்கு எமது அஞ்சலி


மிருசுவில் பங்கின் மைந்தரும் மூத்த குருவுமாகிய அருட்பணி குணசீலன் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் தேவனடி  நேர்ந்துவிட்டார் , அன்னாரின் துயரினால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் பங்கு மக்களுக்கும் , எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம் ,
கனடா வாழ் மிருசுவில் பங்குமக்களுக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 




Sunday, April 23, 2017

தங்க பதக்கம் வென்ற உசன் வீரன் ..செல்வன்.சி.கோகுலன்


கனடா நாட்டில் வருடாந்தம் நடைபெறும் பூப்பந்து சுற்றுப்போட்டியின் 2017 ம் ஆண்டுக்கான போட்டி கடந்த வாரம் டொரோண்டோ நகரில் நடைபெற்றது , பல பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட நிறைய வீரர்களுடன் மோதி , இறுதியில் வெற்றி தங்க பதக்கத்தை உசனை சேர்ந்த இளம் வீரன் செல்வன்.சிவகுமார் கோகுலன் தனதாக்கினார் ,
கனடாவிலும் சர்வதேச பூப்பந்து போட்டிகளிலும் கோகுலன் கலந்து வெற்றிகளை பெற்றுள்ளார் ,
உசேனை சேர்ந்த திரு ,திருமதி, நவரத்தினம் உமாமகேஸ்வரி அவர்களின் பேரனும் ,திரு.திருமதி . சிவகுமார் அவர்களின் மகனுமான செல்வன் கோகுலன் , பல்கலைக்கழக கல்வியை பயின்று வருவதுடன் , விளையாட்டுதுறையிலும் பல சாதனைகளை படித்த்துவருகிறார் ,
அதனை விட தனது திறமைகளையும் விளையாட்டு நுட்பங்களையும் கனடா வாழ் இளம் சிறுவர்களுக்கு பயிற்சி  வழங்கி வருகிறார் .தந்தையார்
திரு.சிவகுமார் நவரத்தினம் அவர்கள் கனடாவில் பூப்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதுடன்
கனடிய தமிழர் மத்தியில் பூப்பந்து விளையாட்டு துறையை வளர்ப்பதில் கனடிய தமிழர் பூப்பந்து சங்கத்தில் நிர்வாக அங்கத்தவராக செயல்பட்டு வருகிறார் ,
புலம் பெயர்ந்தாலும் வேற்று நாட்டில் உசன் மண்ணின் மைந்தர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வது எமக்கு பெருமை தருகிறது ,
கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
எதிர் வரும் ஜூலை மாதம் கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் பூப்பந்தாட்ட  போட்டியில் கனடா சார்பில் விளையாட தெரிவாகியுள்ளார் ,
கோகுலனுக்கு உசன் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு , எதிர்கால போட்டியில் இன்னும் பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகிறோம் .


Saturday, April 15, 2017

உசன் மைந்தன் திரு.குணசீலன் ஆசிரியர் அவர்களுக்கு கனடாவில் உசன் மக்கள் மதிப்பளித்து கௌரவிப்பு


உசன் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனும்,  பிரபல உயிரியல் ஆசிரியரும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி  கலாசாலை விரிவுரையாளருமான சின்னத்தம்பி குணசீலன் அவர்களுக்கு, அவரின் மேலான கல்விச் சேவையைப் பாராட்டி கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் மதிப்பளிப்பும், உசன் மக்களுடனான சந்திப்பும் கனடாவில் நடைபெற்றது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது இளமைக்கால உசன் வாழ்க்கை அனுபவங்கள், உசன் பாடசாலை அனுபவங்கள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் உசன் மக்களுடன் பரிமாறினார்.
நீண்ட கால இடைவெளிகளைத் தாண்டி தனது பழையகால உசன் உறவுகளைச் சந்தித்தது தனது தாயை மீண்டும் சந்தித்த உணர்வைத் தருவதாகவும், உசன் மக்களால் வழங்கப்படட இந்த கெளரவம் தனது தாயிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் போல  தான் உணர்வதாகத் தெரிவித்து தனது உணர்வுகளை உசன் மக்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.   திரு. குணசீலன் ஆசிரியர் தனது  உறவினர்கள், நன்றிக்குரிய மூத்தவர்களிடம் இருந்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.



உசன் மக்களையும், தனது வகுப்புத் தோழர்களையும் கண்ட மகிழ்ச்சி அளவில்லாதது எனத் தெரிவித்து தற்போதைய ஈழத்து இளைய கல்விச் சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை மிகவும் ஆழமாக, அனுபவத் திறனோடு விளங்கப்படுத்தினார்.



அவரைச் சந்திக்க ஆவலோடு வந்திருந்த உசன் மக்களும் தமது இளமைக் கால நினைவுகளை அவரோடு பகிர்ந்துகொண்டனர்.  ஆசிரியருடனான இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.

eKuruvi நிறுவனத்தினரின் வருடாந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட "சமுதாயச் சிற்பி" என்ற விருதைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் கனடா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





.