அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, January 30, 2016

செல்வி.ரம்யா சிவராசா அவர்களை வாழ்த்துகிறோம் ...


உசனை சேர்ந்த திரு திருமதி,சிவராசா செல்வராணி தம்பதிகளின் புதல்வியும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவியுமான செல்வி.ரம்யா அவர்கள், யாழ் பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளார் , அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்
Degree is Bachelor of laws (LLB) பட்டம்பெற்றுள்ளார் .
செல்வி.ரம்யா சிவராசா அவர்களை கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பில் வாழ்த்துகிறோம் .


Thursday, January 21, 2016

உசன் மாணவி செல்வி .சிவகுரு தர்மிளா அவர்களை வாழ்த்துகிறோம் ..


உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் புலமை பரீட்சையில் சித்தி பெற்று , வேம்படி மகளீர் கல்லூரியில் உயர்கல்வி பயின்ற ,உசனை சேர்ந்த
செல்வி.சிவகுரு தரமிளா அவர்கள் ,யாழ் பல்கலைகழக சித்த மருத்துவத்துறை சத்திர சிகிற்சை துறையில் பட்டம் பெற்றுள்ளார் ,
செல்வி.சிவகுரு தரமிளா அவர்களுக்கு .கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுகிறது ....


Wednesday, January 20, 2016

செல்வி,வேணிகா யோகேந்திரம் அவர்களை வாழ்த்துகிறோம் ...

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று , பல்கலைகழகம் சென்ற மாணவர்கள் இலங்கையின் 31 வது பட்டமளிப்பு விழாவில் , பட்டதாரிகளாக தமது திறமைகளை வெளிகொணர்ந்து சாதனை படைத்துள்ளனர் , அவர்களில் பலருக்கும் நாம் பிரத்தியோக அனுமதி கேட்டு அனுப்பிய வேண்டுகோளை ஏற்று பதில் அனுப்பி அனுமதி தந்த மாணவர்களை நாம் வாழ்த்தி பெருமிதம் அடைவதில் மகிழ்வு கொள்கிறோம் ,
அந்த வகையில் உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் தரம் 1 முதல்
 A /L  வரை கல்விகற்று இன்று யாழ் பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற செல்வி ,வேணிகா யோகேந்திரம் (BA degree Economics university. Of jaffna ) அவர்களை உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ஒன்றியம் வாழ்த்தி கௌரவிக்கிறது 




"கரம்பகம் வீரபத்திரர் சனசமூக நிலைய" திறப்பு விழா

எமது அயல் கிராமமான கரம்பகம் மக்களுக்காக சுவிஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட "கரம்பகம் வீரபத்திரர் சனசமூக நிலைய" புதிய கட்டட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது, உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வர குருக்கள் மற்றும் சமய குருமாரின் ஆசியுடன் திறப்புவிழா நடைபெற்றது .
இந்த சனசமூக நிலையத்தில் காரம்பாக்கம் மக்கள் பயன் பெற வாழ்த்துகிறோம் ,
இந்த முயற்சிக்கு முன்னின்று உழைத்த கிராம ஆர்வலர்களுக்கு 
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது  











உசனில் மீண்டும் "முழு நிலா கருத்தரங்கு "


உசன் வாழ் மக்களினதும் மற்றும் அயல் கிராம மக்களின் நலன் கருதி பல தசாப்தங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டுவந்த "முழு நிலா கருத்தரங்கு "
மீண்டும் உசன் கிராமத்தில் நடைபெறவுள்ளது, உசன் கிராம அபிவிருத்திசங்க புதிய நிர்வாக அமைப்பும் , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து இந்த கருத்தரங்கை நடாத்தவுள்ளது ,
நடைமுறை உலக பண்பாட்டு விழுமியங்கள் , நவீன தொழில்நுட்ப அறிவியல் சார் விடையங்கள்,மருத்துவ அறிவியல் கருத்துக்கள் , தொழில் வாய்ப்பு அறிவுரைகள் , சட்டத்துறை சார்ந்த அறிவுரைகள் , தொழில் அதிபர்களின் அனுபவங்கள் , புலம்பெயர் உசன் மக்களின் அறிவியல் தொழில் துறை சார் அனுபவங்கள் என பல தரப்பட்ட விடையங்களை இந்த கருத்தரங்கின் மூலம் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ,
இந்த கருத்தரங்கு மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமி விடுமுறை தினத்தில் மாலை 4 மணிக்கு உசன் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது , இந்த கருத்தரங்கு தொடர்ந்து சிறப்பாக நடைபெற உசன் மற்றும் அயல்கிராம மக்களின் பங்களிப்பு முக்கியமாகிறது .
இந்த முயற்சிக்கான நவீன உபகரணங்கள்  மற்றும்  உதவிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வழங்கவுள்ளது ,அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து உசனுக்கு செல்லுகின்ற மக்கள் மற்றும் இளைய சமுதாய மாணவர்கள் உங்கள் அனுபவங்களை ,திறமைகளை எமது கிராம மக்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது , இந்த முயற்சி வெற்றிகரமாக நகர்த்தி செல்வது உசன் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது , 
உசன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் சிறந்த திட்டமிடலில் முதல் நிகழ்வாக வரும் 23 ம் திகதி மாலை 4 மணிக்கு "நேர் மனப்பாங்குடன் வாழ்வோம் " எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது ,
இன் நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலாளர் ,கருத்தாளர் உயர் திரு.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் ,
இன் நிகழ்வில் உசன் மற்றும் அயல் கிராம மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
இந்த கருத்தரங்கில் தொடர்பான உங்கள் கருத்துக்கள் ஆலோசனை, பங்களிப்புக்களை எதிர்பார்கிறோம் .
தொடர்புகளுக்கு :
உசன் கிராம அபிவிருத்தி சங்கம் - தலைவர் ரூபன் -0777276189
கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் - அஜந்தன் -0014168332120
                                                                                    email :aju@usan.ca










Tuesday, January 19, 2016

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற "உசன் உறவுகள் 2015"


"உசன் உறவுகள் 2015"  கடந்த சனிக்கிழமை, January 16 ஆம் திகதி Scarborough நகரில் அமைந்திருக்கும் Baba Banquet Hall மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த உசன் மக்களோடு மனதுக்கு இதம் தரும் கலை நிகழ்சிகளோடு விழா களைகட்டியிருந்தது. உசன் மண்ணைச் சேர்ந்த New Market  Taxi & Limo  நிறுவன அதிபர் திரு ,திருமதி  நடராசா வசந்தராசா மனைவியோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இளையவர்களின் இசை மற்றும் நடன நிகழ்வுகள் கூடியிருந்தோரைக் கொள்ளைகொண்டன. உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மறைந்த மதிப்புக்குரிய சிவசரவணபவன் (சிற்பி) அவைகளை நினைவுகூர்ந்து அவரோடு நீண்ட நாள் கடமையாற்றிய முன்னாள் ஆசிரியர் திரு ஸ்ரீகாந்தன் அவர்கள் உரை ஆற்றினார். அண்மையில் உசன் மண்ணுக்குச் சென்று வந்த வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் அங்கு நடப்பவற்றைப் பற்றி எடுத்துச் சொன்னார். குறிப்பாக அவரின் அனுசரணையோடு நடாத்தப்படும் இலவச ஆங்கில வகுப்பு எப்படி நடக்கிறது என்றும், எதிர்காலத்தில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

Photos By :E.Nagulan Varshan




















Photos By:E.NagulanVarshan



Monday, January 4, 2016

உசன் இராமநாதன் மகாவித்தியாலயம் 95% சித்தி


2015 ம் ஆண்டுக்கான க.போ.த உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில்  எமது பாடசாலையில் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்  95% சித்தியை பெற்றுள்ளனர் . சமீபகாலமாக எமது பாடசாலை குறுகிய தொகை மாணவர்களையும் ஆசிரிய வளங்களையும் கொப்ண்டு சாதனைகளை நிலைநாட்டிவருவது மகிழ்ச்சிக்குரியதுடன் , பாடசாலை நிர்வாகத்தை கட்டமைக்கும் அதிபரையும் ஆசிரியர்களையும் பெருமை கொள்ளவைக்கிறது .
இந்த பெறுபேற்றின் அடிப்படியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் 
1.ஜெயராஜா  நிலக்சன்-3A
2.குமரன் தசாயினி-3A
3.கோபாலகிருஸ்ணன் தயாழினி-2AB
4.யெயசங்கர் பிரபாயினி-3B
5.தங்கராசா துஸ்சியனா-3B

இந்த  மாணவர்களுக்கு கனடா உசன் ஐக்கிய  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .



கஜகேணி பிள்ளையார் கோவிலில் கணபதி ஹோமம்

உசன் கிராமத்தின் முழுமுதல் தெய்வமாக விளங்கி அருள் பாலிக்கும் கஜகேணி பிள்ளையார் ஆலயத்தில்
சிறப்பு கணபதி ஹோமம் மிக சிறப்பாக நடைபெற்றது , சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் வழிகாட்டலில் நடைபெற்ற சிறப்பு கணபதி ஹோம வழிபாட்டில் பெருமளவான அடியார்கள் கலந்து அருள் பெற்றனர் .