அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, February 23, 2016

உசனில் சிறப்பாக நடைபெற்ற மாசிமாத "முழுநிலாநாள் கருத்தரங்கு "...

உசன் கிராம அபிவிருத்தி சங்கமும் ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து உசன் மக்களினதும் மற்றும் அயல் கிராமமக்களினதும் பயன் கருதி முழு நோன்மதி தினங்களிலே நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள் வரிசையில் கடந்த 22.02.2016 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய மண்டபத்திலே
 "அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செஞ்சொற்செல்வர் திரு ச.லலீசன் கருத்துரை வழங்கினார் ,

மிகவும் சிறப்புற நடைபெற்ற முழுநிலாநாள் தொடர் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு செந்தமிழ் சொல்லருவி திரு ச.லலிசன் அவர்களின் ஆளாமான புலமையினூடு அழகொச்சும் கொஞ்சுதமிழிலே தனக்கே உரித்தான பாணியிலே சிம்மக்குரலில் விடயப்பரப்பை துளைத்தெடுத்து அறிவுமுத்துக்களை அனைவரும் விளங்கி கொள்ளும் வகையிலே பரவவிட்டிருந்தார்.
மக்களின் உற்சாகமான வரவு தொடர்ந்தும் இந்தமாதிரியான நிகழ்வுகளை நடாத்த உந்து சக்தியாக அமைந்திருந்தது , 
உசன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் சிந்தனையும் துரித செயல்பாடும் மற்றைய கிராம மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ,
தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அனைத்து மக்களின் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம் ,








Friday, February 19, 2016

உசனில் மாசி மாத "முழு நிலா நாள் கருத்தரங்கு"


உசன் கிராம அபிவிருத்தி சங்கமும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து உசன் மக்களினதும் மற்றும் அயல் கிராமமக்களினதும் பயன் கருதி முழு நோன்மதி தினங்களிலே நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள் வரிசையில் வரும் 22.02.2016 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய மண்டபத்திலே
 "அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செஞ்சொற்செல்வர் திரு ச.லலீசன் கருத்துரை வழங்கவுள்ளார்.இவர் தற்போது ஈழத்திலே உள்ள சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்.பல்துறை ஆழுமை கொண்டவர்.கம்பன்கழக பேராளர்களில் ஒருவர்.தென்மராட்சி மண்பெற்றெடுத்த தவப்புதல்வர்களில் ஒருவர்.என இவருடைய தன்னிகரில்லா சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.அத்துடன் இன்நிகழ்வுக்குரிய அனுசரனையாளர்களாக எமக்கு உற்சாகம் வழங்கி வரும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்  நிகழ்வை மெருகூட்டுவதற்க்காக ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி இருக்கிறார்கள். எனவே அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




Monday, February 8, 2016

மதுநிலைய அமைப்பு முயற்சிக்கு உசன் மக்கள் ஒன்றிணைத்து கடும் எதிர்ப்பு




உசன் சந்திக்கு அருகாமையில் மதுபான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் மிக வேகமாக நடைபெற்று வருவதை எமது சங்கம் அறிந்து அதிர்ச்சி அடைந்துசமூகத்தின் நலன்கருதி அதைநிறுத்துவதற்க்கு தன்னாலான முயற்ச்சிகளை உடனடியாகவே ஆரம்பித்தது.பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எமது ஆட்சேபனையை பதிவு செய்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 02.02.2016 அன்று யாழ் அரச அதிபரின் பணிப்பிற்க்கமைய தென்மராட்சிபிரதேசெயலாளர் குறித்தபகுதிக்கு கள ஆய்வுக்குவருகைதந்தார்.இதை அறிந்தநாம் மிகவேகமாகசெயற்பட்டு அயல்கிராமத்தைசேர்ந்தஅனைத்துபொதுஅமைப்புகளையும் ஒன்றிணைத்து பலமான எதிர்பைபதிவுசெய்தோம்.அத்துடன் நின்றுவிடாது நேற்றையதினம் இதனால் நேரடியாக பாதிக்கப்படபோகின்ற கிராமங்களின்பொதுஅமைப்புக்கள்(26அமைப்பு) மதத்தலைவர்களை ஒருங்கிணைத்து எமது சங்கமண்டபத்திலே அடுத்தகட்டநடவடிக்கைசம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து தீர்க்கமானமுடிவை எட்டியுள்ளோம்.எனவே இவறான சமுகவிரோத செயற்பாடுகளுக்கெதிராக எமது சங்கம் தொடர்ந்தும் விழிப்புடன் இருந்து காத்திரமான பங்களிப்பை வழங்கும் என உறுதிஅளிக்கிறது. 

கிராம அபிவிருத்திச் சங்கம் உசன்





உசன் கிராம அபிவிரித்திசங்க மதி உரைஞர் செயலணி நியமனம்.

புதிய நிர்வாக கட்டமைப்புடன் மீண்டும் உருப்பெற்றிருக்கும் உசன் கிராம அபிவிருத்திசங்கமானது நடைமுறை நிலைமைக்கு ஏற்ப 
 "சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை/மதிஉரைஞர் (ஆலோசனை)சபை "ஒன்று நேற்றைய பொதுச்சபைக்கூட்டத்திலே நியமிக்கப்பட்டுள்ளது என்பதை தங்கள் அனைவருக்கும் அறியதருவதில் பெருமை கொள்கின்றோம்.இச் செயலணியானது சங்கத்தின் நடவடிக்கைகள்,கிராமத்தின் அபிவிருத்திசம்பந்தமாக எமக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்குவதுடன் திட்டங்களை முன்கொண்டுசெல்ல பக்கபலமாக இருந்து இணைந்து செயலாற்றுவார்கள்.இச்சபைக்கு 17பேர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.இவர்களுடன் இணைந்த வகையில் புலம்பெயர்ந்தவர்களையும் உள்ளீர்க்கப்படவேண்டியுள்ளதால் இத்தொகை அதிகரிக்கும்.எனவே எமது பிரதேசத்தின் உறுதியான-நிலையான அபிவிருத்திக்கு இவ் புத்தியீவிகளின் ஒன்றுசேர்கையானது உயர்வலுசேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
செயலணி உறுப்பினர்கள்
01.பிரம்மசிறி கேதிஸ்வரக்குருக்கள்.
பிரதம குரு உசன் கந்தசாமிகோவில்
02.திரு.தா.திருவருட்செல்வன்.
பிரதமபொறியியலாளர் -நீர்பாசன
திணைக்களம்.
03.திரு.செ.அசோகன்.
மகப்பேற்று வைத்திய நிபுணர்.
04.திரு.க.ரிசிகேசன்.
பொறியியலாளர்.
05.திரு.அ.கஜுபன்.
பொறியியலாளர்.
06.திரு.சி.சுதோகுமார்.
வைத்தியகலாநிதி.
07.திரு.த.குகதாசன்.
வைத்தியகலாநிதி.
08.திரு.ஐ.யெபநாமகணேசன்.
வைத்தியர்.
09.திருமதி.துஸ்யந்தி மிகுந்தன்.
பேராசிரியர்-பீடாதிபதி யாழ்
பல்கலைக்கழகம்.
10.திரு.கு.இராயேந்திரா.
இணைப்பு செயலாளர் -எதிர்கட்சி
தலைவர் இலங்கை பாராளுமன்றம்
11.திரு.பொ.நடேசலிங்கம்.
அதிபர்.
12.திரு.ஜென்சன் றொனால்ட்.
பொதுச்சுகாதாரபரிசோதகர்.
13.திரு.க.வசந்தன்.
குடியேற்ற உத்தியோகத்தர்.
14.திரு.க.சிவானந்தம்.
தபால்அதிபர்(ஒய்வுநிலை).
15.திருமதி.க.சிவமதி.
பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர் -உசன்.
16.செல்வி.ந.தர்மினி.
கிராம அலுவலர்-உசன்.
17.திருமதி.ம.ஜெயவதனி.
சமுர்த்தி உத்தியோகத்தர்-உசன்.
தெரிவுசெய்யப்பட்ட இந்த செயலணி குழுவுக்கு உசன் மக்களும் புலம்பெயர் வாழ் மக்களும் தமது பங்களிப்பை வழங்கி எமது கிராம அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென வேண்டுகிறோம் , உசன் கிராம அபிவிருத்தி சங்க செயல்பாட்டுக்கு , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது முழு அனுசரணை வழங்கி நிக்கிறது ,