அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, June 9, 2026

துயர் பகிர்வு - புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை

சரசாலையைப் பிறப்பிடமாகவும் உசனை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது 90ஆவது வயதில் June 9, 2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான சிவப்பிரகாசம் - நாகமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

அமரர் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வரதன், விமலன், மஞ்சுளா, கிரிதரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், வ

ிஜிதா, வினோதினி, ராஜயோகன், தேவகி, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மித்திரன், அதிரா, ரிஷிபந், நிதாரா, ஆத்மீகா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும்,

அமரர்கள் குமாரசாமி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, மகேந்திரன், சிவராஜா, மற்றும் ஸ்ரீனிவாசன், இராசமோகன், பாக்கியலட்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் June 11, 2026, வியாழக்கிழமை அன்று காலை 8 மணிக்கு 384 Finley Avenue, Ajax L1S 2E4 என்று முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium and Visitation Center ல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் இறுதி நிகழ்வை இந்தத் தளத்தில் காணலாம்.
https://together.oneroomstreaming.com/ZVYNDA