அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, February 14, 2022

திருக்குறள் ஆய்வரங்கம்- 2022


வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி- கனடா
வழங்கும் விசேட திருக்குறள் ஆய்வரங்கம்- 2022.!!!
இந்த இணைய நிகழ்ச்சியில் பிரபல பேச்சாளர்கள் மிக அற்புதமான தலைப்புகளில் திருக்குறள் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள்.!!!
அன்பான அன்னைத்தமிழ் உறவுகளே..! தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அறநெறிச் சிந்தனைகளைக் கேட்டு மகிழ்ந்து பயன்பெற வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி உங்களை அழைக்கிறது..!!!
பெரியவர்கள் இணைந்துகொள்ளும் அதே நேரம் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்துகொண்டு பேச்சாளர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.
இப்பதிவினை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடும் பகிர்ந்துகொண்டால் எல்லோருமே பயன்பெற்று மகிழலாம்.!
நீங்களும் எந்தக் கட்டணமுமின்றி உங்கள் குழந்தைகளைத் திருக்குறள் கற்பதற்கு வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளியில் இணைத்துக்கொள்ளலாம்.
மிக்க நன்றி.!
வாழ்க தமிழ்.!!
அன்புடன்,
திருமதி. ஜோதி ஜெயக்குமார்.
வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி
647-781-7904
வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி வழங்கும் திருக்குறள் ஆய்வரங்கம் - 2022 சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல்வாழ்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறது.