அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, June 23, 2012

உசன் இராமநாதன் மகா வித்தியாலய பெறுபேறு -2011

2011 அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் வருடாந்த க .பொ.தா சாதாரண தரம் 
மற்றும் உயர்தர பரீட்சையில் .உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன கடந்த காலங்களில் உசனில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற காரணத்தால் 
குறைவடைந்த மாணவர் தொகை தற்போது  மீண்டு அதிகரித்து வரும் இத்தருணத்தில் . உசனில் படித்து வரும் மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டியது நம் கடமையாகும் .




Thursday, June 7, 2012

பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்களின் ஓராண்டு நிறைவாஞ்சலி!



பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் திரு சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாக எம்மைக் கடந்து செல்கிறது! அன்னாரின் பிரிவு நேற்றுபோல் இருக்கிறது. தாங்க முடியாத இழப்பை எப்படியோ தாங்கிக் கொண்டு அவரின் நினைவுகளோடு ஒன்றிப்போய் இருக்கிறோம். இந்த ஓராண்டு நிறைவில் அவர் தம்மை நினைவு கொள்கிறோம்!

-குடும்பத்தினர்.

ஓராண்டு உருண்டோட உம்நினைவில் நாமுள்ளோம்.
ஊரார் உவந்துரைக்கும் உத்தமனாம் பண்டிதரே!
தாராள சிந்தனையில் தரணியுள்ளோர் பெருவாழ்வில்
பாராண்ட மன்னர்போல் பத்திராமாய்ப் பணிசெய்தீர்!

உங்கள் பிள்ளைகளாய் உலகினிலே சிறப்பாக
எங்கள் வாழ்வமைய என்ன தவம் செய்துவிட்டோம்!
தங்கள் மனைவியாகத் தவம் செய்தேன் நாயகனே
பங்காளர் மருமக்கள் பேரரெனப் பெருமை கொண்டோம்!

சிவலோகச் செந்நெறியில் சேரவென்று சேவித்தோம்.
பரலோக பாக்கியங்கள் பௌத்திரமாய்ப் பெற்றுடுவீர்!
திரிலோக நாயகனாம் சிவன் தாளில் சேர்ந்திருப்பீர்
புவிலோக நம்வாழ்வில் நினைத்திருப்போம் எந்நாளும்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


Monday, June 4, 2012

நன்றி உணர்வுடன் நடைபெற்ற "மலரஞ்சலி" நிகழ்வு

 உசன் இராமநாதன் மகா வித்தியாலய நீண்டகால ஆசிரியை தங்கம்மா டீச்சர் அவர்களுக்கு . கனடா வில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது
 உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் உசன் மக்கள் அயலூர் மக்கள் மற்றும் உறவினர்கள் இம் மலரஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவர் திரு கனகசபை நகுலன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் .அதனை தொடர்ந்து அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி
கூட்டுபிரர்த்தனை நடைபெற்றது .
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அஞ்சலி உரையுடன் நிகழ்வை நெறிப்படுத்தினார் , தொடர்ந்து ஆசிரியரிடம் கல்விகற்ற மாணவர்கள் உறவினர்கள் என பலர் அஞ்சலி உரை நிகழ்த்தினர் .
கனடா வாழ் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள்
நன்றி உணர்வுடன் ஆசிரியரின் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தினர் .


























Saturday, June 2, 2012

உசன் தங்கம்மா டீச்சர் அவர்களின் இறுதி கிரிகை நிகழ்வின் சில நிமிடம்

உசன் தங்கம்மா டீச்சர் அவர்களின் இறுதி கிரிகை நிகழ்வின் சில நிமிடம்