Monday, November 30, 2020
"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி வழங்கலுக்கு Rs. 40,000.00 அனுசரணை
|
President
|
|
Thursday, October 29, 2020
நவராத்திரி நிகழ்வு
|
President
|
|
Tuesday, October 20, 2020
"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி
|
President
|
|
Wednesday, July 1, 2020
இடர்கால உதவித் திட்டத்தில் பங்கெடுத்தோருக்கு நன்றி
அச்சுதன் கனகசுந்தரம் |
$100.00 |
பாஸ்கரன் சுப்பிரமணியம் |
$100.00 |
ஜெகதீஸ்வரன் சிதம்பரம்பிள்ளை |
$25.00 |
ஜெயசங்கர் இரங்கநாதன் |
$100.00 |
பரம்சோதி வேலுப்பிள்ளை |
$100.00 |
பிரபானந்தன் வெற்றிவேலு |
$500.00 |
சஞ்சிகா சுபேசன் |
$100.00 |
சரவணமுத்து குடும்பம் |
$208.72 |
சரோஜினி தேவபாலன் |
$50.00 |
சாந்தினி சிவானந்தன் |
$100.00 |
சிவகுமார் நவரத்தினம் |
$200.00 |
தயாபரன் சித்தம்பரப்பிள்ளை |
$100.00 |
திசீவன் நவரத்தினம் |
$50.00 |
வரதகுமார் சிதம்பரம்பிள்ளை |
$100.00 |
வேனுசன் யோகராசா |
$100.00 |
விஜயகுமாரி புஷ்பராஜா |
$100.00 |
ரஜனி மதீஸ்வரன் |
$100.00 |
செமிலா பிரகலாதன் |
$100.00 |
சின்னத்துரை குடும்பம் |
$300.00 |
திருமதி பொன்னம்பலம் நினைவாக |
$100.00 |
புஸ்பராணி சிவபாதம் |
ரூ.16,000.00 |
கணேசானந்தன் சரவணமுத்து |
ரூ.50,000.00 |
கேதீஸ்வர சர்மா |
ரூ.10,000.00 |
சரவணா ஐயா |
ரூ.10,000.00 |
சோ. ஸ்ரீகாந்தன் |
ரூ.10,000.00 |
ஐ. ஜெபநாமகனேசன் |
ரூ.10,000.00 |
ச. ஜெயராஜா |
ரூ.10,000.00 |
சே. சஞ்சயன் |
ரூ.10,000.00 |
மீரா தேவரஞ்சன் |
ரூ.10,000.00 |
இந்துஜா சாரங்கன் |
ரூ.10,000.00 |
பே. அரவிந்தன் |
ரூ.10,000.00 |
சு. சற்குருநாதன் |
ரூ.10,000.00 |
கு. கமலதாசன் |
ரூ.7,000.00 |
சு. அருடப்பிரகாசம் |
ரூ.5,000.00 |
து. ரேஜன் |
ரூ.5,000.00 |
பொ. கனகரத்தினம் |
ரூ.5,000.00 |
ச. செல்வராசா |
ரூ.5,000.00 |
முருகேசு |
ரூ.1,000.00 |
|
President
|
|
Sunday, April 19, 2020
இடர்கால உதவி - மேலதிக தகவல்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
|
President
|
|
Sunday, April 12, 2020
இடர் கால உதவி
உலகம் முழுவதையும் உலுக்கி வரும் Covid-19 நுண் கிருமி (வைரஸ்) இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக நாளாந்தம் வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியானவர்களுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்து வந்தாலும் அந்த உதவிகள் அவர்களுக்குப் போதியதாக இல்லை. சமுர்த்தி உதவி மற்றும் உதவிகள் எதுவும் கிடைக்காத தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் சில தொண்டு நிறுவனங்களும், ஊர் அமைப்புகளும், புலம் பெயர்ந்து வாழும் உறவுகளும் நிதி சேகரித்து உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையிலே இப்படியான உதவியை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வேண்டுகோளை ஏற்று உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ஊடாக உதவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உசன் மற்றும் அயற்கிராம மக்களுக்கு இந்த உதவி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை உதவிகள் எதுவும் கிடைக்காத பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கிராம சேவகர், பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த செயற்பாட்டை இரவிசங்கர் இரங்கநாதன், சரவணை செல்வராசா மற்றும் வைத்திய கலாநிதி ஜெபநாமகணேசன், ஆகியோர் முன்னின்று நிர்வகிப்பார்கள்.
இந்த இடர் கால உதவிக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயகுமாரி மற்றும் பொருளாளர் பத்மகாந்தன் ஆகியோருடன் தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம். நிதி உதவியை pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-Transfer மூலம் அனுப்பிவைக்கவும். இந்த e-Transfer இற்குரிய password ஐ அதே மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட அனுப்பி வைக்கவும். e-Transfer மூலம் நிதி அனுப்ப முடியாதவர்களிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் சனிக்கிழமை, April 18, 2020 அன்றுவரை சேரும் நிதி, உதவிக்காக அனுப்பி வைக்கப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
|
President
|
|
Monday, November 20, 2017
உசன் அபிவிருத்தி நிதி சேகரிப்பு - இன்றைய நிலைமை
நன்றி.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
Please click on the image to enlarge it.
|
President
|
|
Tuesday, October 3, 2017
உசன் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு
அன்பார்ந்த உசன் மக்களே!
ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது. அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது. பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள், போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார். இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.
இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது. இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர். தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று கையளிக்கப்டுள்ளது. இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.
இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார். அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது. மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.
|
President
|
|
Thursday, August 27, 2015
உசனில் "ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு..... ஆரம்பம்
|
Anonymous
|
|
Wednesday, August 5, 2015
கனடா உசன் ஒன்றிய அனுசரணையில் உசனில் இலவச WiFi -Tablet சேவை ஆரம்பம்
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் .இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .அத்துடன் இலகுவாக பொத்தகங்களை வாசிக்க கூடியதாக "I book" சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்ககூடிய வகையில் .
Ipad /Tablet சேவையும் இன்று தொடங்கியுள்ளது .
இந்த வசதியை பொது நூலக அங்கத்தவர்கள் இலவசமாக பயன்படுத்தமுடியும் ஒரு கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் இவாறான சேவை முதன் முதலில் உசன் மக்களால் தொடங்கப்பட்டுள்ளது .
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது கிராமத்து சிறுவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது . முதலில் 5 Tablet உடன் ஆரம்பிக்கப்பட இந்த முயற்சி இன்னும் விரிவாக்கம் அடைய புலம் பெயர் வாழ் உசன் மக்களின் உதவியை வேண்டி நிக்கிறோம் .
|
Anonymous
|
|
Monday, January 20, 2014
"உசன் பொது நூலக திறப்பு விழா "
"பண்டிதர்" சரவணமுத்து பொது நூலகம் கடந்த ஜனவரி மாதம் 3 ம் திகதி
முறைப்படி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது .
உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களும் ,மிருசுவில் கத்தோலிக்க மத குருவும் இணைந்து உசன் மக்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தனர் ,
நூலக நிர்வாகசபை தலைவர் திருமதி.மீரா தேவரஞ்சன் தலைமையில் நடந்த விழாவினை ஆலோசகர் திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் தொகுத்து வழங்கினார் . அதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வைத்தியர் .திரு .ஐ.ஜெபனாமகநேஷன் அவர்களும் அதனை தொடர்ந்து கருத்துரைகளும் நடைபெற்றன .இன் நிகழ்வில் உசன் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் நினைவு பேருரையை பண்டிதர் திரு சிவபிரகாசம் அவர்கள் வழங்கியிருந்தார் .
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பான பல்கலைகழக பிரதம நூலகர் திருமதி .ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கியிருந்தார் . நிகழ்வில் கலந்து கொண்ட மக்களின் பார்வைக்கு நூலக புத்தகங்கள் காட்சிபடுத்தபட்டன .
இந்த நூலகம் அமைக்க ஆணிவேராக இருந்து செயல்பட்ட அமேரிக்கா வாழ் திருமதி ,சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா ) அவர்களுக்கு அனைவரின் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
நூலக அமைப்பின் செயலாளர் திரு.ச .ஜதிகேசனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்று , நூலக செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது .
|
Anonymous
|
|
Sunday, December 29, 2013
பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திறப்பு விழா
January மாதம் 3 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு வைபவரீதியாக இந்த நூலகம் திறந்து வைக்கப்படும்.
நூலக நிர்வாகக் குழுத் தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான மு. க. சிவானந்தம் அவர்கள் இந்த நிகழ்வை வழிநடத்துவார். உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ இ. கேதீஸ்வரக் குருக்கள், உசன் செபமாலைதாசர் மாகாண இல்லத்தின் மாகாணத் தலைவர் வணபிதா கொட்வின் நைல்ஸ் (Godwin Niles) ஆகியோரின் ஆசி உரையுடன் இந்த விழா ஆரம்பமாகும். நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி ஐ. ஜெபநாமகணேசன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்துவார். உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபர் திரு. த. சோதிலிங்கம், உசன் ஐக்கியநாணய சங்கச் செயலாளர் திரு. தி. வல்லிபுரம், உசன் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவர் திரு. கா. செல்வராசா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆலோசகர் திரு. ஆ. ஜென்சன் றொனால்ட், உசன் இந்து மா மன்றத் தலைவர் திரு. கு. கமலதாஸ், உசன் பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி க. றெஜிதா ஆகியோர் இந்த விழாவில் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
பண்டிதர் சரவணமுத்து நினைவுப் பேருரையை உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் க. சிவப்பிரகாசம் அவர்கள் நிகழ்த்துவார்கள்.
யாழ் பல்கலைக் கழக பிரதம நூலகர் திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் க. நகுலன் அவர்கள் இந்த நிகழ்வில் மதிப்புரை நிகழ்த்துவார்.
நூலக நிர்வாகக் குழுவின் செயலாளர் செ. ஜதிகேசன் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்துவார்.
இந்தத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
|
Baskaran
|
|
Wednesday, November 13, 2013
நூலக உத்தியோகத்தர்கள் தெரிவாகினர் ....
கிடைத்த விண்ணப்பங்களில் ,தெரிவுசெய்யப்பட சில விண்ணப்பதாரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்வு நிலை உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது ,
அதில் கல்வித்தகமை,திறமை ஆகியவற்றுடன் ,
குடும்பபொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ,அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ,
உசனைசேர்ந்த செல்வி .முருகேசம்பிள்ளை கௌரி அவர்கள் ,நூலக உத்தியோகத்தராகவும் ,திரு.சிவலிங்கம் அவர்கள் நிலைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் நிர்வாகசபையால் ,ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் ,
|
Anonymous
|
|
Thursday, October 3, 2013
உசனில் உருவாக்கி வரும் நூலகம் ......
கனடா ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் ,உசன் நூலக ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திருமதி ,சி.சாந்தினி நவரத்தினம் அவர்கள் நேரடியாக உசனுக்கு சென்று , உசன் நிர்வாகசபை உறுப்பினர்களுடன்
மேலதிக நடவடிக்கை குறித்து கந்துரையாடி நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டு வந்துள்ளார் .
|
Anonymous
|
|














































