அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, August 19, 2012

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல்

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல் இம்மாதம் 25 ஆம் திகதி (25/8/2012) சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 8:00 மணி வரை Scarborough வில் உள்ள Colonel Danforth Park - Highland Creek Dr. Picnic Area 3 (Kingston Road & Lawson Road)ல் நடைபெற உள்ளது.

எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி, கரம்பகம் ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். உங்களின் வருகையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

www.eluthumadduval.org என்ற இணையத் தளத்துக்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எழுதுமட்டுவாள் மக்களின் இந்த முதலாவது ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்புகளுக்கு:
வீ.நடராஜா647-783-2193 / 416-412-1571
கு.சிவராஜா416-893-2377
ராஜம் கார்த்திக்905 970 1815
ராணி கைலன்416-299-8794
பரா416-701-1758


Saturday, August 18, 2012

திரு. கந்தையா நவரத்தினம்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் (நவம்/துரை - Rtd.Senior Assessor-Inland Revenue Dept & Consultant Rtd.Tax Hirdaramani Of Group Of Companies, Colombo) 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமுள்ள மகனும்,
இராசநாயகி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(வட்டக்கச்சி), செல்வரத்தினம்(அச்சுவேலி/லண்டன்), அரியரத்தினம்(உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோகரன்(University Of Moratuwa/கனடா), முரளிகரன்(University Of Peradeniya), பிரபாகரன்(University Of Peradeniya/University Of Surrey-Uk), உமாகரன்(NIBM/கனடா), லதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரிவேணி(கனடா), விஸ்ணுஸ்ரீ, குகாஜினி(லண்டன்), கருணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவிகா, ஜீவிகா, சுவாதிகா, நாவலன் ஆகியோரின் மனம்நிறைந்த பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று பங்களா வீதி மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்து வெற்றுடல் சாவகச்சேரி தனங்கினப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கின்றோம்.

வீட்டு முகவரி :-
பங்களா றோட், மீசாலை, இலங்கை

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசநாயகி(மனைவி) — இலங்கைதொலைபேசி: +94212270144செல்லிடப்பேசி: +94773282122
யசோ(மகன்) — கனடாதொலைபேசி: +14164937084
யசோ(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773282122
முரளி(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777317712
பிரபா(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441483770152
உமா(மகன்) — கனடாதொலைபேசி: +14164395230