அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, June 27, 2014

"கனடாவாழ் விடத்தற்பளைமக்களின் ஒன்றுகூடல் "

எமது அயல் கிராமமான விடத்தற்பளைமக்களின் கனடா  வாழ் உறவுகள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் போன்று முதன் முதலாக கனடாவில் டொரோண்டோ நகரில் 
எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி, செவ்வாய்கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, 3159 birchmount Rd, Scarborough என்ற முகவரியில் இருக்கும் kids town water park என்ற  பூங்காவில் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம நண்பர்கள் உறவினர்கள், மற்றும் விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து  நிகழ்வினைச்சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!!! 
இந்த நிகழ்வுக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் அனைத்து உதவிகளையும் 
ஆதரவையும் ஆதரவையும் வழங்குவதுடன் இன் நிகழ்வு சிறப்புடன் நடைபெற கனடா வாழ் உசன் மக்கள சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

தகவல் 
1)உதயகுமார் நடராஜா.  416-569-5584 

2)சிவசோதி ஜெயக்குமார் 647-781-6161


"உசன் உறவுகள் கலைநிகழ்வு 2013 -கனடா "

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வருடாந்தம் வழங்கும் ,கனடா வாழ் உசன் மக்களின் 2013 ம் ஆண்டுக்கான  குளிர்கால ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் நடைபெற்றது ,
இன் நிகழ்வில் ஒரு பகுதி காணொளி


Monday, June 23, 2014

"உசன் உறவுகள் 2013"

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வருடாந்தம் வழங்கும் ,கனடா வாழ் உசன் மக்களின் குளிர்கால ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் நடைபெற்றது ,
இன் நிகழ்வில் ஒன்றியத்தின் செயலாளர் திரு.சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்கள் வழங்கிய செயற்பாட்டு விளக்க உரை ......



Saturday, June 7, 2014

உசனில் இருந்து உருவாகினார் சட்டதரணி கரன் விஸ்வநாதன்



உசனை சேர்ந்த நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேரனும், மற்றும் தனங்கிளப்பை சேர்ந்த விஸ்வநாதன் பகவதி தம்பதியரின் பேரனும், தேவபாலன் சறோஜினி அவர்களின் மகனுமான செல்வன் கரன் அவர்கள், Toronto York University யில் Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics படிப்பை நிறைவு செய்து, தனது Lawyer (Juris Doctor) கல்வியை அமெரிக்கா Florida வில் உள்ள சட்டத்துறை கல்லுரியிலும், University of Toronto (Faculty of Law)விலும்,  கரன் வெற்றிகரமாக தனது கல்வியை முடித்து இன்று ஒரு சட்டதரணியாக உறுதிபடுத்தியுள்ளார்.

Haran Viswanathan, son of Thevabalan Viswanathan and Sharogene Thevabalan (USAN) has successfully completed his Juris Doctor from University of Toronto (Faculty of Law).  Haran also holds an undergraduate degree in Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics at York University.

Congratulations and we wish Haran the best for his future.





Tuesday, June 3, 2014

உசன் கந்தசுவாமி கோவில் மஹோட்சவ உற்சவம்

உசன் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பமாகியுள்ளது ,தொடரும் பத்து நாட்களுக்குரிய உற்சவ விபரம்





உசன் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்

உசன் கந்த சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா
இன்று ஜூன் மாதம் 3 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது ,
கொடியேற்ற திருவிழா சிவ ஸ்ரீ சுந்தரேஸ்வரகுருக்கள் தலைமையில்
நடைபெற்றது , உசன் வாழ் மக்களுடன் அயல் கிராமமக்களும் , உசனை சேர்ந்த வெளியூர் வாழும் மக்களும் திருவிழாவில் கலந்திருந்தனர் ,
வழமை போன்று உசன் முருக பெருமானின் பத்து நாள் திருவிழா நடைபெறவுள்ளது .





Monday, June 2, 2014

மிருசுவில் பங்கின் வணக்க மாதா வழிபாடு


எமது அயல் சகோதர ஊரான மிருசுவில் பங்கில் வணக்க மாதா வழிபாடும் பழையவாய்க்கால் வேளாங்கன்னி சிற்றாலய வெள்ளிவிழாவும்.May 2014.

மிருசுவில் பங்கில் வணக்க (மே) மாத – மரியன்னை இல்ல தரிசிப்பு – வழிபாடுகள் இம்முறை சிறப்பான முறையில் நடைபெற்றன. 

பங்குத்தந்தை அருட்பணி அ.ஜெ.அ.ஜெயறஞ்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய, வலய ரீதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இல்லங்களுக்கும் மரியன்னை திருச்சொருபம் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதி நாள் விழாவாகவும் புனித கன்னி மரியாள் எலிசபெத்தம்மாவை சந்தித்த திருநாளை முன்னிட்டும் 31-மே-2014 சனி மாலை 4:15 மணிக்கு புனித நீக்கொலார் ஆலய முன்றலில் இருந்து மிருசுவில்-பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்திற்கு கச்சாய், அல்லாரை, கிளாலி, தவசிகுளம் மற்றும் மிருசுவில் பங்குமக்களினால் பவனியாக மரியன்னையின் கொடிகளுடனும் தங்கள் பங்குகளின் புனிதரின் கொடிகளுடனும் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்தின் 25வது வெள்ளிவிழா - திருவிழா திருப்பலியில் இணைந்து மரியன்னைக்கு விழா எடுக்கப்பட்டது. திருநாள் திருப்பலி அருட்பணி மைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையில். அருட்பணி றவிறாஜ், அருட்பணி ஜஸ்ரின், அருட்பணி பாலேந்திரன் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன் அவர்களுடன் நடைபெற்றது திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி தேவ அன்னை பவனி, முடிவில் மரியன்னை ஆசீர் வழங்கப்பட்டது.