அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, October 16, 2012

அருள்மிகு புதுக்குளம் அம்மனுக்கு புனருத்தாரணம்

தான் தோன்றி ஈஸ்வரியாய் எழுந்தருளி முக்கிராமத்துக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும், அருள்மிகு புதுக்குளம் கண்ணகை அம்மன் ஆலய நிர்வாக சபை விடுக்கும் அவசர அறிவித்தல்.
உசன், விடத்தற்பளை, கரம்பகம் ஆகிய முக்கிராமத்து மக்களுக்கும் காலம் காலமாய் அற்புதங்களைக் காட்டி அருள்பாலித்துகொண்டிருக்கும் அருள் மிகு புதுக்குளம் கண்ணகி அம்மன் ஆலயம் கடந்த 10 வருடங்களுக்கு மேல் திருத்தப்படாமல் உள்ளது. ஆலய கட்டிடமும், புதுமை மிகு செந்தமரைக்குளமும் அவசரமாகத் திருத்தப்பட்டு அம்மனின் இருப்பிடத்தைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. அருள் நாயகி புதுக்குளம் அம்மனிடம் அருள் பெற்று வாழும் அனைத்துலக மக்களிடமும் அம்மனுக்காய் உதவி கேட்டு நாடி நிக்கிறோம். அம்மனின் அருட்கடாட்சம் பெற்று அனைத்துலகிலும் வாழும் முக்கிராமத்து மக்களும் அம்மனின் இருப்பையும், அருள் மிகு செந்தாமரைக் குளத்தையும் பராமரிக்கும் உரிமை உங்களுக்கு உரியது என்ற அன்போடு நாம் அறியத் தருவது: மக்களால் அனுமதிக்கப்பட்ட நிர்வாக சபை மற்றும் தர்மகர்த்தா ஊடாக இந்தப் புனருத்தாரணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துலகிலும் வாழும் உசன், கரம்பகம், விடத்தற்பளை அடியார்கள் சேர்ந்து இவ்வரும்பணியை நிறைவேற்றுமாறு வேண்டி நிற்கிறோம்.
வெளிநாடுகளில் வாழும் அடியார்களுக்கு அவர்கள் வழங்கும் நிதியுதவிக்கு பதிவு செய்யபட்ட நிர்வாகசபையின் பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக விபரங்களையும் தகவல்களையும் உங்களுக்கு வசதியான கீழ்காணும் நிர்வாக சபை அங்கத்தவர்களிடம் இருந்து பெற்று அம்மனுக்கு உவந்தளிக்குமாறு வேண்டுகிறோம்.
இத்தகவலை ஆலய தர்மகர்த்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரசுரிக்கப்படுகிறது .

Bank : Commercial Bank of Ceylon Ltd. - Jaffna
Savings Account No: 8600929480

Joint account holders for trusty:
Dr. K. Manikam
Mr. K.Vimalathas
Mrs. Thayawathy Navakumaran

மேலதிக தொடர்புகளுக்கு:
N. நவக்குமாரன் (தர்மகர்த்தா): 0 94 21 222 2793
Dr. மாணிக்கம் (நிர்வாகசபை): 0 94 60 221 7801 / 0 94 77 958 6888
K. விமலதாஸ்: 094 77 340 0959
N. ரவிக்குமார் (ஐரோப்பா, இத்தாலி): 0 39 01 08367475
N. சிவக்குமார் (கனடா): 1+416-491-0919
S. சாந்தினி (கனடா): 1+905-554-0349


Monday, September 24, 2012

திரு. சிறீஇராமநாதன் அவர்கள் இறைபதம் அடைந்தார்

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய, தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளர் (ஆனையிறவு) திரு. தில்லையம்பலம் சிறீஇராமநாதன் அவர்கள் September 23, 2012, ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், ஜெகதாம்பிகையின் (ராணி, ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆருயிர்க் கணவரும், சுபோதினி (டென்மார்க்), தர்சினி (கனடா) ஆகியோரின் ஆசைத் தந்தையும், மங்கயற்கரசி, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா (வருமான வரி இலாகா), காசிநாதன் (மானிப்பாய் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் / கனடா), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், கேதீஸ்வரன் (டென்மார்க்), சிவகணேசவேள் (Homelife Future Realty Inc., கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஞ்சிதன், சங்கவி, சாம்பவி, கீதன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:
ராணி (மனைவி), தர்சா (மகள்): 1 + 416-292-5704
சிவா (மருமகன்): 1 + 647-448-6464
காசிநாதன் (துரை, சகோதரன்): 1 + 416-264-9520


Saturday, September 8, 2012

திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் Ohio மாநிலத்தின் நுகர்வோர் அதிகார சபையின் ஆளுனர்களில் ஒருவராக திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தச் சபையில் குடியிருப்பு நுகர்வாளர்களைப் பிரதிநிதுத்துவப்படுத்த உள்ளார்.

Prime Engineering and Architecture, Inc. நிறுவனத்தின் உரிமையாளரான இவர் Asian Indian American Business Group இன் முன்னாள் தலைவராகவும், City of Columbus' Transportation Services Advisory Commission இன் முன்னாள் உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.

உசன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தக் கௌரவம் கிடைத்திருப்பது உசன் மக்களுக்குப் பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. உசன் கிராமத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், தான் வாழும் பிரதேசத்தின் நலனிலும் கரிசனையாக உள்ளார்.

உசன் மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் திருமதி சுசீலா சுகுணேஸ்வரன் அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

Congratulations Mrs. Susheela Suguness.

Mrs. Susheela Suguness has been appointed to the Ohio Consumers’ Counsel Advisory Board. The Office of the Ohio Consumers’ Counsel (OCC) is the statewide legal representative for Ohio’s residential consumers in matters related to their utility services. The OCC advocates for residential consumers in administrative proceedings before the Public Utilities Commission of Ohio (PUCO), state and federal courts, federal regulatory agencies, and the Ohio General Assembly. The agency also monitors utility companies’ compliance with regulatory standards and educates consumers about utility issues and the services provided by their investor-owned electric, natural gas, telephone and water companies.

Governing board members are appointed by the Ohio Attorney General. Mrs. Suguness has been appointed to represent residential consumers.

Mrs. Suguness is the Owner of Prime Engineering and Architecture, Inc. She is a past president of the Asian Indian American Business Group and a past board member of the City of Columbus’ Transportation Services Advisory Commission. Mrs. Suguness is a registered Professional Engineer and received her B. Tech from the Indian Institute of Technology in Madras, India and her M.S. from the University of Florida.

Please read the news release.

As Mrs. Susheela Suguness hails from Usan, it makes Usan people very proud. United People Association of Usan in Canada congratulates Mrs. Suguness for her great achievement.



Sunday, August 19, 2012

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல்

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல் இம்மாதம் 25 ஆம் திகதி (25/8/2012) சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 8:00 மணி வரை Scarborough வில் உள்ள Colonel Danforth Park - Highland Creek Dr. Picnic Area 3 (Kingston Road & Lawson Road)ல் நடைபெற உள்ளது.

எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி, கரம்பகம் ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். உங்களின் வருகையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

www.eluthumadduval.org என்ற இணையத் தளத்துக்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எழுதுமட்டுவாள் மக்களின் இந்த முதலாவது ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்புகளுக்கு:
வீ.நடராஜா647-783-2193 / 416-412-1571
கு.சிவராஜா416-893-2377
ராஜம் கார்த்திக்905 970 1815
ராணி கைலன்416-299-8794
பரா416-701-1758


Saturday, August 18, 2012

திரு. கந்தையா நவரத்தினம்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் (நவம்/துரை - Rtd.Senior Assessor-Inland Revenue Dept & Consultant Rtd.Tax Hirdaramani Of Group Of Companies, Colombo) 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமுள்ள மகனும்,
இராசநாயகி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(வட்டக்கச்சி), செல்வரத்தினம்(அச்சுவேலி/லண்டன்), அரியரத்தினம்(உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோகரன்(University Of Moratuwa/கனடா), முரளிகரன்(University Of Peradeniya), பிரபாகரன்(University Of Peradeniya/University Of Surrey-Uk), உமாகரன்(NIBM/கனடா), லதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரிவேணி(கனடா), விஸ்ணுஸ்ரீ, குகாஜினி(லண்டன்), கருணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவிகா, ஜீவிகா, சுவாதிகா, நாவலன் ஆகியோரின் மனம்நிறைந்த பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று பங்களா வீதி மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்து வெற்றுடல் சாவகச்சேரி தனங்கினப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கின்றோம்.

வீட்டு முகவரி :-
பங்களா றோட், மீசாலை, இலங்கை

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசநாயகி(மனைவி) — இலங்கைதொலைபேசி: +94212270144செல்லிடப்பேசி: +94773282122
யசோ(மகன்) — கனடாதொலைபேசி: +14164937084
யசோ(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773282122
முரளி(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777317712
பிரபா(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441483770152
உமா(மகன்) — கனடாதொலைபேசி: +14164395230