அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, November 20, 2017

உசன் அபிவிருத்தி நிதி சேகரிப்பு - இன்றைய நிலைமை

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் உட்பட உசன் அபிவிருத்திக்காக உசன் சனசமூக நிலையமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் நிதி சேகரித்து வருவது குறித்து அறிவித்து உசன் மக்களின் பங்களிப்பைக் கேட்டிருந்தோம்.  Rs.50,00,000.00 ஐ இலக்காகக் கொண்டு இந்த நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  உங்கள் பலரின் பங்களிப்புடன் இந்த நிதி சேகரிப்பு அண்ணளவாக அரைவாசி இலக்கை அண்மித்துக்கொண்டிருக்கிறது என்ற தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.  குறித்த இலக்கை அடைய இன்னும் பங்களிப்புத் தேவைப்படுகிறது.  இந்த நேரத்திலே உசன் சனசமூக நிலையம் உங்களின் உதவியை நாடி எழுதிய கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.  உசன் சனசமூக நிலையத்தோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவியை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Please click on the image to enlarge it.


Sunday, November 19, 2017

திருமதி:தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்தார்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பண்டாரி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய பணியாளர் - Royal Razat Farm, ஓமான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்புக்கரசி, அஜந்தா, அஜந்தன், விஜயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா, பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பரமேஸ்வரி(பிரான்ஸ்), திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபுஸ்பராசா, இளங்கோவன், சுசித்வினி, ஜெனிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோஜ், ஆதித், அனுசன், யனுசன், அமிர்தன், அகரவன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

தகவல்
குடும்பத்தினர்
சிதம்பரப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94779688080
விஜயகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447792732460
அன்புக்கரசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148477014
அஜந்தா — கனடா
செல்லிடப்பேசி: +1647765 0760
அஜந்தன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +6143436189


Sunday, November 12, 2017

அம்பலவாணர் நல்லதங்கம்


உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நல்லதங்கம் அவர்கள் November 12, 2017, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அமரர் இராமநாதர் அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியதேவி (சுவிஸ்) ,காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஜெயதேவன் (நோர்வே), நகுலாதேவி (இலங்கை), சத்தியாதேவி (டென்மார்க்), ஜெயதீபா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாதம், ஜெயராஜா, சுலோசனாதேவி, கந்தசாமி, பிறேமானந்தம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன் - துவாரகா, இந்துஜா- சாரங்கன், செந்தூபியா - அச்சுதன், பிருந்தூபியா - வசந்தறூபன், துவாகரன், டிலக்க்ஷி, சகான், சாரங்கி, கஸ்தூரியா - தனுசன், பிரசீத், கிரிசாந், பிரீர்த்தி, குலேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லாஸ்யா, ஸதுர்யா, அகரன், லாதுஷா, ஆருக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் November 14, 2017, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் விடத்தற்பளை இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளிற்காக உசன் ஈச்சங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, November 11, 2017

திருமதி.நல்லதங்கம் அம்பலவாணர் அவர்கள் இறைவடி சேர்ந்தார்

உசனை சேர்ந்த திருமதி. அம்பலவாணர் நல்லதங்கம் அவர்கள் சற்று முன் இறைவனடி சேர்ந்தார் ,
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .





Thursday, October 26, 2017

திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம்



பிறப்பு  08-04-1949   -    இறப்பு 18-10-2017

சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம் October 18ம் திகதி புதன்கிழமை Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகரட்னம் - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் வினாசித்தம்பி - சிவாகாமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்மலாதேவியின் அன்புக் கணவரும்,

கௌசிகன், நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் நல்லுடல்,  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல்  October 28ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணிவரையும், October 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படும்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 10:30 மணிவரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பகல் 10:40 மணிக்கு அன்னாருடைய நல்லுடல் தகனத்துக்காக 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0  என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
கருணானந்தன்: +1 416 894 3353
நிர்மலாதேவி: +1 416 303 7709
மேனகன்: +1 647 291 6362

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.