அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 30, 2019

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்


உசன் கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தனது இள வயதிலிருந்தே உசன் கிராம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் சீத்த ஆயுள்வேத வைத்தியர் ஐயாத்துரை ஜெபநாமகனேசன் அவர்கள். இவரின் வைத்திய சேவையால் உசன் கிராமமும், அயற்கிராமமும், ஏன் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மேலும் பல கிராமங்களும், நகரங்களும் பயன்பெற்று வருகின்றன.  புலம் பெயர் தமிழர்களும் இவரின் சேவையைப் பெற்று பலனடைத்துள்ளனர்.

இவரின் தயாரிப்பில்  முற்றிலும் தரமான மூலிகைகள் கொண்டு, இரசாயணக் கலப்படமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் இலங்கையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பாவனையில் உள்ளது.

குமாரிக்கா சந்தனாதி எண்ணெய் நெல்லி, அவிரி, கையாந்தாரை, கறிவேப்பிலை, வல்லாரை, மருதாணி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. தலை வலி போக்கவல்லது. முடி உதிர்தல், பொடுகு நீங்க, கூந்தல் கருமையாகும். தும்மல் நின்றுபோகும். கண்குளிர்ச்சி, ஞாபக சக்தி அதிகமாகும். நரை முடி நீங்கி ஆரோக்கியமான முடி வளரும். 

அதிகளவு கனேடிய தமிழ் மக்களும் பாவித்து பலன் கிடைத்தது.

இப்பொழுது கனடாவில் கிடைக்கிறது குமாரிக்கா சந்தனாதி எண்ணெய்.
நீங்களும் குமாரிக்கா சந்தனாதி எண்ணெயை வாங்கிப் பாவித்துப் பயன் பெறலாம்.

தொடர்புகளுக்கு
416-434-4440

www.tamilkadai.ca எனும் Online தளத்திலும் order செய்யலாம்.





Thursday, August 29, 2019

அஞ்சலி

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் கணித ஆசிரியர் ஆறுமுகம் சோதிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற தகவலை ஆழ்ந்த துயரத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். 1976 - 1982 காலப் பகுதியில் இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விப் பணி புரிந்தார்.

இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் தனது கல்விச் சேவையை வழங்கியிருந்தார்.

அன்னாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.


Thursday, July 18, 2019

பொதுச் சபைக் கூட்டமும், நிர்வாகசபைத் தெரிவும், ஒன்றுகூடலும்

மதிப்புக்குரிய உறுப்பினர்களே,

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் சனிக்கிழமை, August 24, 2019 அன்று 1555 Neilson Road, Scarborough, M1B 2P4,  ON என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park இல் பிற்பகல் 1 மணியளவில் இடம் பெறும்.

நடப்பு நிர்வாகசபையின் ஆயுட்காலம் இந்த வருடத்தோடு முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இந்தப் பொதுக் கூட்டத்தில் இடம்பெறும்.

இந்தப் பதிவை உத்தியோக பூர்வ அழைப்பாக ஏற்று பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபையையும் தெரிவு செய்யுமாறு உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தற்போதைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு தற்காலிக தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவரின் தலைமையில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். 11 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகசபை தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தப் 11 நிர்வாகசபை உறுப்பினர்களும் முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் தங்களுக்குள் பதவிவழி உறுப்பினர்களைத் தெரிவு செய்து பொதுச் சபைக்கு அறிவிப்பார்கள்.

விரும்பியவர்கள் 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தமது தெரிவைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்டியிடும் நிலையில் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கூடுதல் வாக்குகளைப் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.

அன்பான உசன் மக்களே,

அதே தினத்தில் ஒன்றுகூடலும் இடம்பெறும்.  பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும் என்றாலும் ஒன்றுகூடல் காலை 11 மணியளவில் ஆரம்பித்துவிடும் என்பதைக் கவனத்தில் எடுத்து அதற்கு முன்பே Neilson Park இற்கு வந்து சேருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஒன்றுகூடலில் உதவியாளர்களாக சேவை செய்ய முன்வருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் விருப்பத்தைச் செயலாளரிடம் தெரிவிக்கவும்.

உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடலுக்கு அன்போடு அழைக்கிறோம்.


விஜயகுமாரி புஷ்பராஜா
செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
July 18, 2019.


Tuesday, July 16, 2019

திரு. வே. மார்க்கண்டு ஆசிரியர்


கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும், கடந்த 15 வருடங்களாக France இல் வசித்துவந்தவரும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியரும், எழுதுமட்டுவாள், மருதங்கேணி அரசினர் பாடசாலையின் முன்னாள் அதிபருமான வே. மார்க்கண்டு அவர்கள் July 16, 2019 அன்று தனது 87 ஆவது வயதில் France இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஆசிரியை முத்துப்பிள்ளை (முத்து ரீச்சர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,

சின்னையா நவரத்தினம் (சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு, காலஞ்சென்ற விநாசித்தம்பி, சிவயோகநாதன் (நீர்வேலி), இராமநாதன் (கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்லம்மா (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்

இறுதி அஞ்சலி
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France

Wednesday, 17 July 2019 3:00 PM - 6:00 PM
Thursday, 18 July 2019 3:00 PM - 6:00 PM
Friday, 19 July 2019 3:00 PM - 6:00 PM
Saturday, 20 July 2019 3:00 PM - 6:00 PM
Sunday, 21 July 2019 3:00 PM - 6:00 PM

கிரியை
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France

Monday, 22 July 2019 10:00 AM - 12:00 PM

தகனம்
Crématorium d'Amilly-Montargis
400 rue Pisseaux, 45200 Amilly, France

Monday, 22 July 2019 2:30 PM

தொடர்புகளுக்கு

நவரத்தினம் - மருமகன்
Phone : +33238361446

வாசுகி - மகள்
Mobile : +33766585399
Mobile : +33652285495

இராமநாதன் - +14162996763

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, July 14, 2019

சுப்பிரமணியம் இரவீந்திரன்

உசனைப்  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரவீந்திரன் அவர்கள் July 8, 2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா (கனடா), தர்சிகா (கனடா), சுவீத்தா (கனடா), கிசாந் (கனடா),  கீர்த்திகா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி, இராதாகிருஸ்ணன், குகானந்தன், ஜெனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தமீந்திரன், சுமிந்திரன், காலஞ்சென்ற சிறீதரன், திருச்சோதி, பிரகலாநிதி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற தியாகராசா, பரமநாதன், கிருஸ்ணபிள்ளை, புஷ்பநாதன், சிவக்கொழுந்து, இரசலட்சுமி, சிவமணி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன், சிவராசா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மனோன்மணி, யோகேந்திராதேவி, தனேஸ்வரி, திலகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அர்விந், அஸ்விதா, ரகீர்த்தா, அதுசன், அதுசனா, நகீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, July 14, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாக்கியம் - மனைவி
Mobile : 19055544031

கிசாந் - மகன்
Mobile : +14168755494

தர்சிகா - மகள்
Mobile : +16476691910

சுவீத்தா - மகள்
Mobile : +16472726543

கீர்த்திகா - மகள்
Mobile : +447931693622

சகோதரி
Mobile : +94776134528

அன்னாரின் ஆன்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.

(இந்தத் தகவல் www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.)